செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

மூன்றடி நிலம்-

மூன்றடி நிலம்- அளந்து கொடுத்தால் போதும்'

              புகைப்படம்: மூன்றடி நிலம்- அளந்து கொடுத்தால் போதும்'
நரசிம்மரால் வதைக்கப்பட்ட இரண்யன் அசுர குணம் கொண்டவனாக இருந்தாலும், அவன் மகன் பிரகலாதன் மகாவிஷ்ணுவின் பக்தனாகத் திகழ்ந்தான். அந்த பிரகலாதனின் வம்சத்தில் வந்தவனே மகாபலிச் சக்கரவர்த்தி. மகாபலி மலைநாட்டினை நீதி வழுவாது நேர்மையுடன் ஆட்சிபுரிந்து வந்தான். இவனை மக்கள் "மாவேலி' என சிறப்புப் பெயரிட்டு அழைத்துப் போற்றினர். மிக நல்லவனாகத் திகழ்ந்தாலும் பெயரும் புகழும் பெற்றதால் ஆணவம் கொஞ்சம் கொஞ்சமாகத் தலை தூக்கியது. ஒரு கட்டத்தில் தேவலோகத்தையே வெற்றிகொண்டான். மகாபலி மன்னன் முற்பிறவியில் எலியாகப் பிறந்தவன். இந்த எலி, வேதாரண்யம் கோவில் வளாகத்திற்குள் சுற்றித் திரிந்து சுகமாக வாழ்ந்து வந்தது. ஒருசமயம் வேதாரண்யேஸ்வரர் கோவில் கருவறைக்குள் நுழைந்த அந்த எலி, அங்கே உணவு ஏதாவது கிடைக்குமா என்று பார்த்தது. சுவாமி முன் சரவிளக்கு ஒன்று எரிந்துகொண்டிருந்தது. அந்த விளக்கில் நெய் இடப்பட்டிருந்ததால் அதன் மணம் எலியைக் கவர்ந்தது. அதனால் அந்த விளக்கு நோக்கி மேலே பாய்ந்து ஏறியது எலி. அந்த வேளையில் விளக்கின் திரி அணையும் தறுவாயில் இருந்தது. எலி, விளக்கில் உறைந்திருந்த நெய்யினை உண்டபோது, தற்செயலாக திரி தூண்டப்பட்டு பிரகாசமாக எரிந்தது. அணையவிருந்த ஆலய விளக்கைத் தூண்டி எரியச் செய்ததால் அந்த எலி மகாபுண்ணியம் பெற்றது. அதன் விளை வாக மறுபிறவியில் மலை நாட்டின் சக்கரவர்த்தி யாக- மகாபலியாக அசுர குலத்தில் பிறந்தது. பிரகலாதன் வம்சத்தில் பிறந்ததால் தெய்வீகப்பற்று இருந்தாலும், பிரக லாதனின் தந்தை இரணியனின் அசுர குணமும் சிறிதளவு இருந்ததால்தான் அவனுக்கு கர்வமும் உண்டானது. இந்நிலையில் மகாபலியின் அசுரகுணம் மேலோங்கியிருந்ததால், தேவலோகவாசிகள் பயத்துடன் மறைந்தே வசிக்கலானார்கள். இந்த நிலையை மாற்ற எண்ணிய அதிதி தேவி, தன் கணவர் காசிப முனிவரிடம் ஆலோசனை கேட்டாள். விரதம் மேற்கொண்டு மகாவிஷ்ணுவை வணங்குமாறு கூறினார் காசிபர். அவ்வாறே அதிதி தவம் மேற்கொள்ள, அவள் தவத்திற்கு மகிழ்ந்து காட்சி தந்த மகா விஷ்ணு, ""என்ன வரம் வேண்டும்?'' என்றார். ""தாங்கள் எனக்கு மகனாகப் பிறந்து, மூவுலகத் தில் வாழும் தேவர்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்'' என்று வேண்டினாள்; மகாவிஷ்ணு வும் அருளினார். அதன்படி ஆவணி மாத சுக்லபட்ச துவாதசி திதியில், திருவோணம் கூடிய சுபயோக சுபதினத் தில் அதிதி- காசிப முனி தம்பதிக்கு வாமனராக அவதரித்தார் மகாவிஷ்ணு. குழந்தையாகக் காட்சி தந்த பகவான், அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே ஐந்து வயது பாலகனாக மாறி காட்சி தந்தார். மகாவிஷ்ணுவின் வாமன அவதாரத்தை அறிந்த தேவர்களும் ரிஷிகளும் முனிவர்களும் மகிழ்ந்தனர். ஒவ்வொருவரும் ஒரு பரிசை அளித்து கௌரவித்தனர். இந்நிலையில் மகாபலிச் சக்கரவர்த்தி நர்மதைக் கரையில் அசுவமேத யாகம் செய்து கொண்டிருந்தான். யாகம் முடிந்ததும் அனைவருக்கும் தானம் கொடுத்து வாழ்த்துகள் பெற்றுக் கொண்டிருந்தான். மகாபலியின் யாகத்தாலும், தான தர்மத் தாலும் அவனது பலம் வலுப்படும் என்பதை அறிந்த வாமனர், மகாபலி தானம் கொடுக் கும் இடம் நோக்கி வந்தார். வாமனரை வர வேற்ற மகாபலி தன் மனைவி விந்தியா வலி மற்றும் மகள் ரத்னமாலாவுடன் வாமனருக்கு பாத பூஜை செய்தார். அப்போது மகாபலியின் மகள் ரத்னமாலா, "இந்தச் சிறுவன் எத்தனை அழகு! இவனுக்குத் தாயாகி பாலூட்டும் பாக்கி யம், எனக்கு அடுத்த பிறவியிலாவது கிட்ட வேண்டும்' என்று மனதிற்குள் நினைத் தாள். மகாபலியோ, "இந்தச் சிறுவன் வரவால் நம் நாடு மேன்மேலும் சிறப்பு பெறவேண்டும்' என்று நினைத்தான். அவர்களின் மனப்போக்கை அறிந்த வாமனர், "நினைத்தது நிறைவேறும்!' என்று அருளினார். "நான் நினைத்ததைத்தான் வாமனர் கூறுகிறார்' என்று இருவரும் எண்ணி மகிழ்ந்தார்கள். பாதபூஜை முடிந்ததும் மகாபலி, ""சுவாமி! தங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்க, ""பெரிதாக ஒன்றும் வேண்டாம். மூன்றடி நிலம்- அதுவும் என் காலடியில் அளந்து கொடுத்தால் போதும்'' என்றார் வாமனர். ""அவ்வாறே தருகிறேன்'' என்று மகாபலி கூற, அருகிலிருந்த அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் மகா பலியிடம் ரகசியமாக, ""மகாபலி, வந்திருப்பவன் சாதாரண சிறுவன் அல்ல. அவனுக்குத் தானம் தராதே. அவன் மூன்றடி மண் கேட்பது உன்னை அழிக்கத்தான்'' என்று கூறினார். ""வாக்குக் கொடுத்து விட்டேன். கொடுத்த வாக்கை மீற மாட்டான் மகாபலி'' என்று நீர் வார்க்க கமண்டலத்தை எடுத்தான். அப்போது சுக்கிராச்சாரியார் வண் டாக மாறி கமண்டலத் தின் வாயை நீர் வராமல் அடைத்தார். இதை யறிந்த வாமனர், தர்ப் பையை எடுத்துக் குத்தவே, அது வண்டின் ஒரு கண்ணைப் பழுதாக்கிவிட்டது. வலி பொறுக்கமுடியாமல் கமண்டலத்திலிருந்து வெளியேறிப் பறந்தார் சுக்கிராச்சாரியார். அதன்பின் தாரை வார்த்துக் கொடுத்தான் மகாபலி. மறுகணம் திரிவிக்கிரமனாக விண்ணுக்கும் மண்ணுக்கும் வளர்ந்து நின்றார் வாமனர். வானையும் பூமியையும் இரண்டடியால் அளந்து, ""மூன்றாவது அடிக்கு எங்கே இடம் மகாபலி?'' என்று கேட்க, அவரை வணங்கிய மகாபலி, ""இதோ என் தலை. மூன்றாவது அடியாக அளந்து ஆட்கொள்ளுங்கள்'' என்று திரிவிக்கிரமன் காலில் பணிந்தான். உடனே பகவான், மகாபலியின் தலையில் வலது காலை வைத்து, ""ஏழு சிரஞ்சீவிகளுள் நீயும் ஒருவனாக இடம் பெறுவாய். நான் உன்னை என்றும் பாதுகாப்பேன்'' என்றார். மகாவிஷ்ணுவின் பாதம் பட்டதும் மகாபலியின் ஆணவம் முழுவதுமாக அழிந்தது. அந்தச் சமயத்தில், ""பகவானே, ஒரு வரம் வேண்டும்'' என்றான் மகாபலி. ""என்ன?'' என்று பகவான் கேட்க, ""பிரபுவே, நான் பாதாளத்தில் அழுத் தப்படும் இந்த நாள் போற்றப்பட வேண்டும். இதே நாளில் நான் மீண்டும் என் நாட்டு மக்களைக் காண வரவேண்டும்'' என்றான். அந்த வரத்தையும் அருளி னார் பகவான். பகவானிடம் மகாபலி வாங்கிய வரத்தின்படி ஆவணி மாத திருவோண நாளில் மக்களைக் காண மலை நாட்டிற்கு மகாபலி வருவதாக நம்பப் படுகிறது. ஆகவே, மலை நாடான கேரளாவில் அந்த நாள் ஓணம் பண்டிகையாகக் கொண் டாடப்படுகிறது. ஆவணி மாத அஸ்த நட்சத்திரம் துவங்கி பத்து நாட்கள் விழா கொண்டாடப் பட்டாலும், "ஆவணி திருவோணம், அதற்கு முதல் நாளான தலை ஓணம், மறுநாள் வரும் ஒன்றாம் ஓணம் ஆகிய மூன்று நாட்கள் மிகச் சிறப்பாக- தெருவெங்கும் மலர் மணம் மணக்க விழா கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையின்போது இடப்படும் "அத்தப்பூ' கோலம் மிகவும் பிரசித்தம். சாதாரண மலர்களுடன், ஆவணியில் மட்டும் மலரும் விசேஷ பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டு இந்தக் கோலம் அமையும். மகாவிஷ்ணு குள்ள உருவில் வாமனராக அவதாரம் எடுத்து, அதேசமயம் நெடிதுயர்ந்த திரிவிக்கிரம திருக்கோலத்தில் காட்சி கொடுத்த தால்- அவதாரத்திற்குள் அவதாரமாகத் திகழ்வதால், ஆவணி மாதத் திருவோணம் மிகவும் போற்றப்படுகிறது. இந்தப் பண்டிகையின்போது பல்வகைப் பாயாசத்துடன் விருந்து படைப்பார்கள். இதை மலையாளத்தில் "ஓணசத்ய' என்பர். புத்தாடை அணிவது பண்டிகையின் சிறப்பு. ஓணம் பண்டிகைக்கென்றே சிறப்பாக புத்தாடை அணிவர். இப்பண்டிகையையொட்டி கேரளாவில் படகுப் போட்டிகள் நடைபெறும். கோவில்களில் பகவானுக்கு மஞ்சள் துண்டு அணிவித்து வழிபடுவது வழக்கம். பத்மநாபபுரம் பத்மநாப சுவாமிக்கு ஓணவில் சாற்றி வழிபடுவர். சபரிமலை ஸ்ரீஐயப்பன் கோவில் ஓணத்துக்காக ஐந்து நாட்கள் திறந்திருக்கும். குருவாயூரில் குழந்தை கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு பால் பாயாசம் சமர்ப்பித்து வழிபாடு நடைபெறும். அன்று குருவாயூர் உன்னிகிருஷ் ணரை தரிசிப்பது மிகவும் சிறப்பு. இதற்கு ஒரு புராணக்கதை சொல்லப்படுகிறது. வாமனராக வந்த பகவான், தன் தந்தை மகாபலியை பாதாளத்தில் அழுத்தியதைப் பொறுத்துக் கொள்ள முடியாத மகாபலியின் மகள், பகவானை பழிவாங்க வேண்டுமென்று நினைத்தாள். "நயவஞ்சகனாக வந்தவனுக்கா நான் பாலூட்ட நினைத்தேன். இவனை விஷம் கொடுத்துக் கொன்றால் என்ன?' என்ற எண்ணம் அவள் மனதில் உதித்தது.காலம் சென்றது. யுகம் மாறியது. திருமால், கிருஷ்ணனாக தேவகியின் வயிற்றில் பிறந்து, யசோதையிடம் கோகுலத்தில் வளர்ந்தபோது, மகாபலியின் மகள் ரத்னமாலா கம்சனின் அரக்கர் குலத்தில் பூதகியாகப் பிறந்து வளர்ந்து வந்தாள். கிருஷ்ணன், கோகுலத்தில் வளர்வதை அறிந்த கம்சன், பூதகியை அழைத்து அவனைக் கொல்லும்படி கட்டளையிட்டான். சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த பூதகி- அதாவது வாமன அவதாரத்தின்போது மகாபலியின் மகளாகப் பிறந்தவள், இதுதான் நல்ல சமயமென்று ஓர் அழகியாக மாறி கோகுலம் சென்றாள். அவள் வந்த வேளையில் வானத்தில் இடி மின்னல் தோன்றி, மழை வருவதற்கு அறிகுறியாக பலத்த காற்று வீசிக் கொண்டிருந்தது. அப்போது யசோதையின் வீட்டுக்கதவைத் தட்டினாள் பூதகி. கதவைத் திறந்த யசோதை, ""இந்த அகால வேளையில் வந்திருக்கும் நீ யாரம்மா?'' என்று இரக்கப்பட்டு கேட்டாள். ""அம்மா, எனக்கு பெண் குழந்தை பிறந்ததால், என் கணவர் வீட்டை விட்டு என்னைத் துரத்திவிட்டார். குழந்தையைக்கூட என்னிடம் தரவில்லை. இன்றிரவு இங்கே தங்குவதற்கு இடம் தாருங்கள். விடிந்ததும் சென்று விடுகிறேன்'' என்று கண்ணீர்விட்டாள். அந்தச் சமயத்தில் குழந்தை கண்ணன் அழும் குரல் கேட்கவே, ""அம்மா, குழந்தை அழும் சத்தம் கேட்கிறது. தொட்டிலை ஆட்டித் தாலாட்டவா?'' என்று கேட்க, யசோதையும் அவளை உள்ளே அனுமதித்தாள். இடி மின்னலுடன் பலத்த காற்றும் வீசவே, விளக்குகள் அணைந்தன. எங்கும் இருள். இதுதான் தக்க சமயம் என்று குழந்தையை வாரி எடுத்து பூதகி தன் மார்போடு அணைத் தாள். முன்கூட்டியே மார்பகத்தில் விஷத்தைத் தடவிக் கொண்டிருந்தவள் குழந்தைக்குப் பால் கொடுப்பதற்கு முயற்சித்தாள். குழந்தை கிருஷ்ணன், அவள் மார்பகத்தை உறிஞ்சி, கால்களால் உதைக்கவே அவள் மல்லாக்க விழுந்து பிணமாகிப்போனாள். அணைந்த விளக்கை ஏற்றிக்கொண்டு வந்த யசோதை தரையில் அரக்கி ஒருத்தி பிணமாகக் கிடப்ப தைக் கண்டு அஞ்சி நிற்க, குழந்தை கிருஷ்ணனோ அரக்கியான பூதகியின்மீது கால்களை உதைத்துக் கொண்டிருந்தான். அப்பொழுது தான் யசோதைக்குப் புரிந்தது, இவள் கம்சனால் அனுப்பப்பட்ட அரக்கி என்று. குழந்தையை வாரி எடுத்து அணைத்துக் கொண்டாள் யசோதை. இதில் தனிச்சிறப்பு என்னவென்றால் பகவான் கிருஷ்ணனைக் கொல்ல வந்த அரக்கி யானவள் பிணமானதும், அவளை இடுகாட்டில் எரியூட்டினார்கள். அப்போது பிணம் எரியும் போது வெளிப்படும் துர்நாற்றம் எழாமல், சந்தனக்கட்டையை எரித்தால் வரும் நறுமணம் போல வாசம் வந்ததாம். பகவானின் பாதங்கள் பூதகியின் உடல்மீது பட்டதால் அவள் புனிதம் அடைந்தாள் என்று புராண வரலாறு கூறுகிறது. மகாவிஷ்ணுவின் ஜென்ம நட்சத்திரம் திருவோணம் என்பதால், ஆவணி திருவோணம் மிகவும் போற்றப்படுகிறது. அன்று திருமால் கோவிலுக்குச் சென்று பெருமாளை வழிபடும்போது, அவர் பாதங்களை தரிசித்தால் பாவங்கள் அழியும்; புண்ணியம் சேரும்; வைகுண்டத்தில் ஓர் இடம் கிட்டும் என்பர் பெரியோர்

நரசிம்மரால் வதைக்கப்பட்ட இரண்யன் அசுர குணம் கொண்டவனாக இருந்தாலும், அவன் மகன் பிரகலாதன் மகாவிஷ்ணுவின் பக்தனாகத் திகழ்ந்தான். அந்த பிரகலாதனின் வம்சத்தில் வந்தவனே மகாபலிச் சக்கரவர்த்தி. மகாபலி மலைநாட்டினை நீதி வழுவாது நேர்மையுடன் ஆட்சிபுரிந்து வந்தான். இவனை மக்கள் "மாவேலி' என சிறப்புப் பெயரிட்டு அழைத்துப் போற்றினர். மிக நல்லவனாகத் திகழ்ந்தாலும் பெயரும் புகழும் பெற்றதால் ஆணவம் கொஞ்சம் கொஞ்சமாகத் தலை தூக்கியது. ஒரு கட்டத்தில் தேவலோகத்தையே வெற்றிகொண்டான். மகாபலி மன்னன் முற்பிறவியில் எலியாகப் பிறந்தவன். இந்த எலி, வேதாரண்யம் கோவில் வளாகத்திற்குள் சுற்றித் திரிந்து சுகமாக வாழ்ந்து வந்தது. ஒருசமயம் வேதாரண்யேஸ்வரர் கோவில் கருவறைக்குள் நுழைந்த அந்த எலி, அங்கே உணவு ஏதாவது கிடைக்குமா என்று பார்த்தது. சுவாமி முன் சரவிளக்கு ஒன்று எரிந்துகொண்டிருந்தது. அந்த விளக்கில் நெய் இடப்பட்டிருந்ததால் அதன் மணம் எலியைக் கவர்ந்தது. அதனால் அந்த விளக்கு நோக்கி மேலே பாய்ந்து ஏறியது எலி. அந்த வேளையில் விளக்கின் திரி அணையும் தறுவாயில் இருந்தது. எலி, விளக்கில் உறைந்திருந்த நெய்யினை உண்டபோது, தற்செயலாக திரி தூண்டப்பட்டு பிரகாசமாக எரிந்தது. அணையவிருந்த ஆலய விளக்கைத் தூண்டி எரியச் செய்ததால் அந்த எலி மகாபுண்ணியம் பெற்றது. அதன் விளை வாக மறுபிறவியில் மலை நாட்டின் சக்கரவர்த்தி யாக- மகாபலியாக அசுர குலத்தில் பிறந்தது. பிரகலாதன் வம்சத்தில் பிறந்ததால் தெய்வீகப்பற்று இருந்தாலும், பிரக லாதனின் தந்தை இரணியனின் அசுர குணமும் சிறிதளவு இருந்ததால்தான் அவனுக்கு கர்வமும் உண்டானது. இந்நிலையில் மகாபலியின் அசுரகுணம் மேலோங்கியிருந்ததால், தேவலோகவாசிகள் பயத்துடன் மறைந்தே வசிக்கலானார்கள். இந்த நிலையை மாற்ற எண்ணிய அதிதி தேவி, தன் கணவர் காசிப முனிவரிடம் ஆலோசனை கேட்டாள். விரதம் மேற்கொண்டு மகாவிஷ்ணுவை வணங்குமாறு கூறினார் காசிபர். அவ்வாறே அதிதி தவம் மேற்கொள்ள, அவள் தவத்திற்கு மகிழ்ந்து காட்சி தந்த மகா விஷ்ணு, ""என்ன வரம் வேண்டும்?'' என்றார். ""தாங்கள் எனக்கு மகனாகப் பிறந்து, மூவுலகத் தில் வாழும் தேவர்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்'' என்று வேண்டினாள்; மகாவிஷ்ணு வும் அருளினார். அதன்படி ஆவணி மாத சுக்லபட்ச துவாதசி திதியில், திருவோணம் கூடிய சுபயோக சுபதினத் தில் அதிதி- காசிப முனி தம்பதிக்கு வாமனராக அவதரித்தார் மகாவிஷ்ணு. குழந்தையாகக் காட்சி தந்த பகவான், அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே ஐந்து வயது பாலகனாக மாறி காட்சி தந்தார். மகாவிஷ்ணுவின் வாமன அவதாரத்தை அறிந்த தேவர்களும் ரிஷிகளும் முனிவர்களும் மகிழ்ந்தனர். ஒவ்வொருவரும் ஒரு பரிசை அளித்து கௌரவித்தனர். இந்நிலையில் மகாபலிச் சக்கரவர்த்தி நர்மதைக் கரையில் அசுவமேத யாகம் செய்து கொண்டிருந்தான். யாகம் முடிந்ததும் அனைவருக்கும் தானம் கொடுத்து வாழ்த்துகள் பெற்றுக் கொண்டிருந்தான். மகாபலியின் யாகத்தாலும், தான தர்மத் தாலும் அவனது பலம் வலுப்படும் என்பதை அறிந்த வாமனர், மகாபலி தானம் கொடுக் கும் இடம் நோக்கி வந்தார். வாமனரை வர வேற்ற மகாபலி தன் மனைவி விந்தியா வலி மற்றும் மகள் ரத்னமாலாவுடன் வாமனருக்கு பாத பூஜை செய்தார். அப்போது மகாபலியின் மகள் ரத்னமாலா, "இந்தச் சிறுவன் எத்தனை அழகு! இவனுக்குத் தாயாகி பாலூட்டும் பாக்கி யம், எனக்கு அடுத்த பிறவியிலாவது கிட்ட வேண்டும்' என்று மனதிற்குள் நினைத் தாள். மகாபலியோ, "இந்தச் சிறுவன் வரவால் நம் நாடு மேன்மேலும் சிறப்பு பெறவேண்டும்' என்று நினைத்தான். அவர்களின் மனப்போக்கை அறிந்த வாமனர், "நினைத்தது நிறைவேறும்!' என்று அருளினார். "நான் நினைத்ததைத்தான் வாமனர் கூறுகிறார்' என்று இருவரும் எண்ணி மகிழ்ந்தார்கள். பாதபூஜை முடிந்ததும் மகாபலி, ""சுவாமி! தங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்க, ""பெரிதாக ஒன்றும் வேண்டாம். மூன்றடி நிலம்- அதுவும் என் காலடியில் அளந்து கொடுத்தால் போதும்'' என்றார் வாமனர். ""அவ்வாறே தருகிறேன்'' என்று மகாபலி கூற, அருகிலிருந்த அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் மகா பலியிடம் ரகசியமாக, ""மகாபலி, வந்திருப்பவன் சாதாரண சிறுவன் அல்ல. அவனுக்குத் தானம் தராதே. அவன் மூன்றடி மண் கேட்பது உன்னை அழிக்கத்தான்'' என்று கூறினார். ""வாக்குக் கொடுத்து விட்டேன். கொடுத்த வாக்கை மீற மாட்டான் மகாபலி'' என்று நீர் வார்க்க கமண்டலத்தை எடுத்தான். அப்போது சுக்கிராச்சாரியார் வண் டாக மாறி கமண்டலத் தின் வாயை நீர் வராமல் அடைத்தார். இதை யறிந்த வாமனர், தர்ப் பையை எடுத்துக் குத்தவே, அது வண்டின் ஒரு கண்ணைப் பழுதாக்கிவிட்டது. வலி பொறுக்கமுடியாமல் கமண்டலத்திலிருந்து வெளியேறிப் பறந்தார் சுக்கிராச்சாரியார். அதன்பின் தாரை வார்த்துக் கொடுத்தான் மகாபலி. மறுகணம் திரிவிக்கிரமனாக விண்ணுக்கும் மண்ணுக்கும் வளர்ந்து நின்றார் வாமனர். வானையும் பூமியையும் இரண்டடியால் அளந்து, ""மூன்றாவது அடிக்கு எங்கே இடம் மகாபலி?'' என்று கேட்க, அவரை வணங்கிய மகாபலி, ""இதோ என் தலை. மூன்றாவது அடியாக அளந்து ஆட்கொள்ளுங்கள்'' என்று திரிவிக்கிரமன் காலில் பணிந்தான். உடனே பகவான், மகாபலியின் தலையில் வலது காலை வைத்து, ""ஏழு சிரஞ்சீவிகளுள் நீயும் ஒருவனாக இடம் பெறுவாய். நான் உன்னை என்றும் பாதுகாப்பேன்'' என்றார். மகாவிஷ்ணுவின் பாதம் பட்டதும் மகாபலியின் ஆணவம் முழுவதுமாக அழிந்தது. அந்தச் சமயத்தில், ""பகவானே, ஒரு வரம் வேண்டும்'' என்றான் மகாபலி. ""என்ன?'' என்று பகவான் கேட்க, ""பிரபுவே, நான் பாதாளத்தில் அழுத் தப்படும் இந்த நாள் போற்றப்பட வேண்டும். இதே நாளில் நான் மீண்டும் என் நாட்டு மக்களைக் காண வரவேண்டும்'' என்றான். அந்த வரத்தையும் அருளி னார் பகவான். பகவானிடம் மகாபலி வாங்கிய வரத்தின்படி ஆவணி மாத திருவோண நாளில் மக்களைக் காண மலை நாட்டிற்கு மகாபலி வருவதாக நம்பப் படுகிறது. ஆகவே, மலை நாடான கேரளாவில் அந்த நாள் ஓணம் பண்டிகையாகக் கொண் டாடப்படுகிறது. ஆவணி மாத அஸ்த நட்சத்திரம் துவங்கி பத்து நாட்கள் விழா கொண்டாடப் பட்டாலும், "ஆவணி திருவோணம், அதற்கு முதல் நாளான தலை ஓணம், மறுநாள் வரும் ஒன்றாம் ஓணம் ஆகிய மூன்று நாட்கள் மிகச் சிறப்பாக- தெருவெங்கும் மலர் மணம் மணக்க விழா கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையின்போது இடப்படும் "அத்தப்பூ' கோலம் மிகவும் பிரசித்தம். சாதாரண மலர்களுடன், ஆவணியில் மட்டும் மலரும் விசேஷ பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டு இந்தக் கோலம் அமையும். மகாவிஷ்ணு குள்ள உருவில் வாமனராக அவதாரம் எடுத்து, அதேசமயம் நெடிதுயர்ந்த திரிவிக்கிரம திருக்கோலத்தில் காட்சி கொடுத்த தால்- அவதாரத்திற்குள் அவதாரமாகத் திகழ்வதால், ஆவணி மாதத் திருவோணம் மிகவும் போற்றப்படுகிறது. இந்தப் பண்டிகையின்போது பல்வகைப் பாயாசத்துடன் விருந்து படைப்பார்கள். இதை மலையாளத்தில் "ஓணசத்ய' என்பர். புத்தாடை அணிவது பண்டிகையின் சிறப்பு. ஓணம் பண்டிகைக்கென்றே சிறப்பாக புத்தாடை அணிவர். இப்பண்டிகையையொட்டி கேரளாவில் படகுப் போட்டிகள் நடைபெறும். கோவில்களில் பகவானுக்கு மஞ்சள் துண்டு அணிவித்து வழிபடுவது வழக்கம். பத்மநாபபுரம் பத்மநாப சுவாமிக்கு ஓணவில் சாற்றி வழிபடுவர். சபரிமலை ஸ்ரீஐயப்பன் கோவில் ஓணத்துக்காக ஐந்து நாட்கள் திறந்திருக்கும். குருவாயூரில் குழந்தை கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு பால் பாயாசம் சமர்ப்பித்து வழிபாடு நடைபெறும். அன்று குருவாயூர் உன்னிகிருஷ் ணரை தரிசிப்பது மிகவும் சிறப்பு. இதற்கு ஒரு புராணக்கதை சொல்லப்படுகிறது. வாமனராக வந்த பகவான், தன் தந்தை மகாபலியை பாதாளத்தில் அழுத்தியதைப் பொறுத்துக் கொள்ள முடியாத மகாபலியின் மகள், பகவானை பழிவாங்க வேண்டுமென்று நினைத்தாள். "நயவஞ்சகனாக வந்தவனுக்கா நான் பாலூட்ட நினைத்தேன். இவனை விஷம் கொடுத்துக் கொன்றால் என்ன?' என்ற எண்ணம் அவள் மனதில் உதித்தது.காலம் சென்றது. யுகம் மாறியது. திருமால், கிருஷ்ணனாக தேவகியின் வயிற்றில் பிறந்து, யசோதையிடம் கோகுலத்தில் வளர்ந்தபோது, மகாபலியின் மகள் ரத்னமாலா கம்சனின் அரக்கர் குலத்தில் பூதகியாகப் பிறந்து வளர்ந்து வந்தாள். கிருஷ்ணன், கோகுலத்தில் வளர்வதை அறிந்த கம்சன், பூதகியை அழைத்து அவனைக் கொல்லும்படி கட்டளையிட்டான். சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த பூதகி- அதாவது வாமன அவதாரத்தின்போது மகாபலியின் மகளாகப் பிறந்தவள், இதுதான் நல்ல சமயமென்று ஓர் அழகியாக மாறி கோகுலம் சென்றாள். அவள் வந்த வேளையில் வானத்தில் இடி மின்னல் தோன்றி, மழை வருவதற்கு அறிகுறியாக பலத்த காற்று வீசிக் கொண்டிருந்தது. அப்போது யசோதையின் வீட்டுக்கதவைத் தட்டினாள் பூதகி. கதவைத் திறந்த யசோதை, ""இந்த அகால வேளையில் வந்திருக்கும் நீ யாரம்மா?'' என்று இரக்கப்பட்டு கேட்டாள். ""அம்மா, எனக்கு பெண் குழந்தை பிறந்ததால், என் கணவர் வீட்டை விட்டு என்னைத் துரத்திவிட்டார். குழந்தையைக்கூட என்னிடம் தரவில்லை. இன்றிரவு இங்கே தங்குவதற்கு இடம் தாருங்கள். விடிந்ததும் சென்று விடுகிறேன்'' என்று கண்ணீர்விட்டாள். அந்தச் சமயத்தில் குழந்தை கண்ணன் அழும் குரல் கேட்கவே, ""அம்மா, குழந்தை அழும் சத்தம் கேட்கிறது. தொட்டிலை ஆட்டித் தாலாட்டவா?'' என்று கேட்க, யசோதையும் அவளை உள்ளே அனுமதித்தாள். இடி மின்னலுடன் பலத்த காற்றும் வீசவே, விளக்குகள் அணைந்தன. எங்கும் இருள். இதுதான் தக்க சமயம் என்று குழந்தையை வாரி எடுத்து பூதகி தன் மார்போடு அணைத் தாள். முன்கூட்டியே மார்பகத்தில் விஷத்தைத் தடவிக் கொண்டிருந்தவள் குழந்தைக்குப் பால் கொடுப்பதற்கு முயற்சித்தாள். குழந்தை கிருஷ்ணன், அவள் மார்பகத்தை உறிஞ்சி, கால்களால் உதைக்கவே அவள் மல்லாக்க விழுந்து பிணமாகிப்போனாள். அணைந்த விளக்கை ஏற்றிக்கொண்டு வந்த யசோதை தரையில் அரக்கி ஒருத்தி பிணமாகக் கிடப்ப தைக் கண்டு அஞ்சி நிற்க, குழந்தை கிருஷ்ணனோ அரக்கியான பூதகியின்மீது கால்களை உதைத்துக் கொண்டிருந்தான். அப்பொழுது தான் யசோதைக்குப் புரிந்தது, இவள் கம்சனால் அனுப்பப்பட்ட அரக்கி என்று. குழந்தையை வாரி எடுத்து அணைத்துக் கொண்டாள் யசோதை. இதில் தனிச்சிறப்பு என்னவென்றால் பகவான் கிருஷ்ணனைக் கொல்ல வந்த அரக்கி யானவள் பிணமானதும், அவளை இடுகாட்டில் எரியூட்டினார்கள். அப்போது பிணம் எரியும் போது வெளிப்படும் துர்நாற்றம் எழாமல், சந்தனக்கட்டையை எரித்தால் வரும் நறுமணம் போல வாசம் வந்ததாம். பகவானின் பாதங்கள் பூதகியின் உடல்மீது பட்டதால் அவள் புனிதம் அடைந்தாள் என்று புராண வரலாறு கூறுகிறது. மகாவிஷ்ணுவின் ஜென்ம நட்சத்திரம் திருவோணம் என்பதால், ஆவணி திருவோணம் மிகவும் போற்றப்படுகிறது. அன்று திருமால் கோவிலுக்குச் சென்று பெருமாளை வழிபடும்போது, அவர் பாதங்களை தரிசித்தால் பாவங்கள் அழியும்; புண்ணியம் சேரும்; வைகுண்டத்தில் ஓர் இடம் கிட்டும் என்பர் பெரியோர்

தர்மம்

"எங்கு தர்மம் உள்ளதோ அங்கு வெற்றி நிச்சயம்'
பாரத நாட்டின் பொக்கிஷமான மகாபாரதம், தர்மத்தையே நிலைக்களமாகக் கொண்டது. 

                                     புகைப்படம்: எங்கு தர்மம் உள்ளதோ அங்கு வெற்றி நிச்சயம்'
பாரத நாட்டின் பொக்கிஷமான மகாபாரதம், தர்மத்தையே நிலைக்களமாகக் கொண்டது. இதில் காணப்படும் தர்மங்கள் எண்ணிலடங்காதவை.மகாபாரதக் கதையில் வீரம், சூழ்ச்சி என எத்தனையோ இருந்தாலும், தர்மத்தின் அடிப்படையில்தான் வெற்றி கிட்டியிருக்கிறதே தவிர, வீரத்தினாலோ சூழ்ச்சியினாலோ மட்டுமல்ல. வீரமும் சூழ்ச்சியும் தற்காலிக வெற்றியைத் தேடும் உபாயங்கள். ஆனால் நிலையான- அழி வில்லாத வெற்றிக்கு தர்மமே முற்றிலும் சாதனமாக இருந்தது. பாண்டவர்கள் தர்மத்தைவிட்டு சிறிதும் விலகாதவர்கள். கௌரவர்கள் சாதுக்க ளான பாண்டவர்களுக்கு வஞ்சகமும் சூழ்ச்சியும் செய்து துன்பத்தையே கொடுத்தனர். துன்மதி கொண்ட துரியோதனன் பக்கத்திலும் நல்லவர் கள் இருந்தார்கள். இந்தப் பட்டியலில் முக்கிய இடம் பெறுபவள் துரியோதனனைப் பெற்றவளான காந்தாரிதேவியே. காந்தார தேசத்து இளவரசியான காந்தாரி, திருதராஷ்டிர மன்னன் பார்வை அற்றவன் என்று தெரிந்தேதான் மணம் புரிந்துகொண்டாள். பிறவிக் குருடனான திருதராஷ்டிரனை மணம் செய்துகொண்டபிறகு, தன் கணவன் காணாத இந்த உலகத்தை இனி தானும் பார்க்கக் கூடாது என்று, தன் இரண்டு கண்களையும் துணியால் கட்டிக்கொண்டு இறுதி வரை வாழ்ந்தாள். இவளுடைய பதிவிரதா தர்மத்தின் முன்பு பரந் தாமனான கண்ணனும் செயலிழந்து நின்றான். பாரதப் போர் கடுமையாக நடந்து பதினேழு நாட்கள் முடிந்துவிட்டன. குருஷேத்ர புண்ணிய பூமி குருதி வெள்ளத்தில் மிதந்தது. கௌரவ சேனையின் பாசறையில் சூன்யம் நிறைந்திருந்தது. அவர்கள் தரப்பில் போரிட்ட மாவீரர்கள் அனைவரும் மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்றுவிட்டார்கள். துரியோதனனுக்குத் துணையிருந்த நண்பன் கர்ணன், அருமைச் சகோதரர்கள், வஞ்சகமே உருவான சகுனி மாமன் யாவருமே இப்போது இல்லை. கௌரவர்களுக்காக- அஸ்தினாபுர அரசைக் காப்பதற்காகவே இருந்த பீஷ்ம பிதாமகர், உயிரை விடாமல் உத்திராயண புண்ணிய காலத்தை எதிர்பார்த்துக்கொண்டு வெட்டப் பட்ட மரம்போல அம்புப் படுக்கையில் சயனித்து விட்டார். தனித்து விடப்பட்ட அஸ்தினாபுரத்து இளவல் தன்னந்தனியாகத் தவிக்கிறான். சித்தம் தடுமாறி நிலை குலைந்து நிற்கிறான். பாண்டவர் பக்கம் வெற்றி கிட்டும் நிலை. துரியோதனனின் மனம் கொந்தளிக்கிறது; எதை யெல்லாமோ எண்ணுகிறது. அன்று பரமாத்மா கண்ணன் சொன்ன சொற்கள் நினைவில் நிழலாடுகிறது. "தர்மத்தை சூது கவ்வும்; காலம் வரும்போது தர்மமே வெல்லும் என்று சொன்னானே! அந்தக் காலம் வந்துவிட்டதே. எனக்குத் துணையாக யாருமே இல் லையே!' என்று கலங்குகிறான். அன்று அரச சபையில் "பாவி துச்சாதனனின் செந்நீர், துரியோதனனின் ரத்தம், மேவி இரண்டும் கலந்து குழலில் பூசி, நறுநெய் குளித்தபிறகே சீவிக் குழல் முடிப்பேன்' என்று கூந்தலைக் கலையவிட்ட பாஞ்சாலியின் சபதம் ஈட்டியாகக் குத்துகிறது. இருண்ட பாசறையில் தன்னந்தனி யாகப் புலம்பித் தவிக்கிறான். கூடாரத்தில் எங்கேயோ இருந்த பகடைக்காய்கள் அவனைப் பார்த்து சிரிப்பது போன்ற ஒரு பிரமை. வெறிபிடித்தவன்போல அங்கும் இங்கும் நடக்கிறான். பாசறைக் கதவருகே ஏதோ நிழலாடுகிறது. யாரோ வரும் காலடிச் சப்தமும் கேட்கிறது. திரும்பிப் பார்க்கிறான். அங்கே அவனைப் பெற்ற அன்னை காந்தாரி நிற்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டு, ""அம்மா, நீங்களா? என்ன இந்த வேளையில்... அதுவும் யுத்த பூமியில்?'' என்று வேதனையோடு கேட்டான். ""அன்பு மகனே, உன் நிலையை அறிந்து தாயான நான் எப்படி நிம்மதியாக இருப்பேன். குழந்தையின் தவிப்பை தாயையன்றி யார்தான் அறிவார். வருந்தாதே மகனே'' என்று அவன் தலையை அன்போடு வருடினாள். வணங்காமுடியான துரியோதனனுக்கு தாயின் வருடல் இதமளிக்கிறது. ""அம்மா! நாளை நடக்கும் போரில் எனக்கு மரணம் நிச்சயமென்று என் உள்ளுணர்வு அச்சுறுத்துகிறது'' என்றான். மகனின் நிலைகண்டு அன்பு மேலிட, ""கௌரவக் குலத்தோன்றலே! நீயா மரணத்தைக் கண்டு அச்சப்படுகிறாய். கோழையாகி விடாதே. நீ மரணத்திலிருந்து தப்ப வழியுண்டு மகனே. உன்னை யாரும் வெல்ல முடியாது. அதற்கு உபாயம் சொல்லத்தான் உன்னைத் தேடிவந்தேன்'' என்றாள் வாஞ்சையோடு. ""என்ன சொல்கிறீர்கள் தாயே?'' என்றான் துரியோதனன் ஆச்சரியத்தோடு. ""சுவேதனா! எனது கற்பு நெறியும் பதிவிரதா தர்மமும் உண்மையாக இருக்கு மாயின், உன்னை யாராலும்- எந்த அஸ்திரத்தினாலும் வெல்ல முடியாது. மரணமும் உன்னைத் தீண்டாது. நான் சொல்வதை நீ செய்யவேண்டும்'' என்றாள். ""சொல்லுங்கள் தாயே!'' ""துரியோதனா, இந்தப் போர்க்களத்தின் அருகிலுள்ள தடாகத்தில் குளித்துவிட்டு, பிறந்த மேனியாக என்னிடம் வா. எந்தவிதமான ஆடையோ ஆபரணமோ உன் மேனியில் இருக் கக்கூடாது. இத்தனைக் காலமாகக் கட்டியிருந்த கண் களைத் திறந்து, என் பரிபூரணமான கடாட்சத் தைப் பொழிந்து உன்னை ஆசீர்வதிக்கிறேன். எனது நயன தீட்சை உன் மேனியில் பட்டு விட்டால் உனக்கு மரணம் கிடையாது. விரை வாகப் போய் வா மகனே'' என்று துரிதப்படுத்தி னாள் காந்தாரி. ""அப்படியே தாயே'' என்று ஆனந்தமாக தடாகத்தை நோக்கி ஓடினான் காந்தாரி மைந்தன். அதேவேளை பாண்டவர் பாசறையில் இருந்த கண்ணனின் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. துரியோதனனின் பாசறையில் காந்தாரிக்கும் துரியோதனனுக்கும் நடந்த உரையாடல்கள் எல்லாம் சர்வ வியாபியான கண்ணன் அறிந்துகொண்டான். காந்தாரியின் கற்பின் ஆற்றலையும், அவளுடைய பதிவிரதா தர்மத்தின் பவித்ரத்தையும் அறிந்த கண்ணன் கவலைப்படலானான். கடவுளான கண்ணனே கவலைப்படுவதா? ஆம்; காந்தாரியின் கற்பு எதையும் செய்யவல்லது. காந்தாரியின் திட்டப்படி துரியோதனன் தடாகத்தில் நீராடிவிட்டு பிறந்த மேனியோடு வந்து அவளுடைய நயன தீட்சையையும் ஆசி களையும் பெற்றுவிட்டால் அவனை யாருமே வெல்ல முடியாது. பதிவிரதா தர்மத்தின் முன்பாக பார்த்தசாரதியான கண்ணனாலும் எதுவும் செய்யமுடியாது. பாஞ்சாலியின் அவிழ்ந்த கூந்தலும் சபதமும் மாதவனுடைய மனதில் தோன்றுகிறது. பாண்டவ தூதன் கண்ணன் பாசறைக்கு வெளியே வந்து தடாகத்தை நோக்கி விரைந்தான். நட்ட நடுநிசி. யாரும் அறியாமல் மறைவான இடத்தில் நின்றான் மாயக்கண்ணன். காந்தாரி மைந்தன் தடாகத்தில் மூழ்கி நீராடியபின் பிறந்த மேனியுடன் நீர்த்திவலைகள் உடம்பில் வழிய மேலே எழுந்தான். அப்போது மெல்லிய குழலோசை கேட்கிறது. "என்ன இது! இந்த நள்ளிரவில் யார் குழலை இசைக்கிறார்கள்? எல்லாம் அந்த மாயாவி கிருஷ்ணன் வேலையாகத் தான் இருக்கும். அவர் வருவதற்குள் தாயிடம் சென்று விட வேண்டும்' என்று துடிப்புடன் கிளம்பும் போது, கபடமாகச் சிரித்தபடி எதிரிலே வந்து நின்றான் கண்ணன். அதைக் கண்டு அதிர்ச்சி யடைந்து நின்றுவிட்டான் துரியோதனன். ""கௌரவக் குலத் தோன்றலே! என்ன இது? ஏனிந்த அவலம்? எதற்காக இந்த விபரீத விளையாட்டு! எல்லா சாஸ்திரங்களும் அறிந்தவன்தானே நீ? இந்த மதியீனமான காரியம் செய்ய எப்படித் துணிந்தாய்?'' என்றான் கண்ணன். ""கண்ணா! நேரத்தை வீணாக்காமல் வழியை விடு. நான் உடனே என் தாயைக் காணவேண்டும். இந்த இடத்தை விட்டுச் சென்றுவிடு'' என்றான் வெறுப்போடு. ""துரியோதனா! நீ செய்யும் காரியம் சரியானது அல்ல. என்னதான் தாயாக இருந்தாலும் அவளும் ஒரு பெண்தானே. தோளுக்குமேல் போனால் தோழன் என்பார்கள். இத்தனை வயது கடந்த ஆண் மகன் பிறந்த மேனியோடு எந்தப் பெண்ணையாவது பார்ப்பானா? உன் வீரமும் ஆற்றலும் எங்கே போயிற்று? நீ செய்யும் இந்தக் கேவலமான காரியம் பெண்மையையே இழிவுபடுத்துவதாக உள்ளதே!'' என்றான் கண்ணன் விஷமச் சிரிப்போடு. துரியோதனன் ஒரு வினாடி குழம்பி, ""கண்ணா, என்னிடம் தற்போது ஆடை எதுவுமே இல்லை'' என்றான் பரிதாபமாக. கண்ணன் அவசரமாக, ""துரியோதனா, கவலையை விடு. பக்கத்தில் உள்ள வாழை இலையைப் பறித்து உனது இடுப்பில் மட்டுமாவது மறைத்துக்கொண்டு உன் மாதாவிடம் செல்'' என்று சொல்லிவிட்டு, தான் வந்த வேலை முடிந்துவிட்ட திருப்தியோடு அங்கிருந்து நகர்ந்தான். ""அம்மா, அம்மா'' என்று கூவியபடி ஆவலோடு வந்தான் துரியோதனன். மகனின் குரலைக் கேட்ட காந்தாரி, மகனைப் பார்த்து அருளைப் பொழிய வேண்டும் என்று தன் கண்களின் கட்டுகளை அவிழ்த்தாள். தன் சக்தியை எல்லாம் திரட்டி தன் மகனின் தலையிலிருந்து ஒவ்வொரு அங்கமாக தனது பார்வையைச் செலுத்திக்கொண்டே வந்த காந்தாரி, இடுப்பிற்குக் கீழே இலை ஒன்று மூடியிருப்பதைக் கண்டு தீயை மிதித்தவள்போல அதிர்ச்சியானாள். தனது கற்பின் சக்தியாலும், பதிவிரதா தர்மத்தின் ஆற்றலாலும் தன் மகனைக் காப்பாற்றிவிடலாம் என்று திடமாக நம்பி வந்தாள். காந்தாரியின் எண்ணம் பலிக்கவில்லை. தனது பார்வை படமுடியாத இடுப்பிற்குக் கீழே துரியோதனன் தாக்கப்பட்டால் அவன் அழிவு நிச்சயம் என்பதை எண்ணி கண்ணீர் வடித்தாள். பதினெட்டாம் நாள் யுத்தம். பீமனுக்கும் துரியோதனனுக்கும் கடும் போர். எல்லாவித அஸ்திரங்களையும் கையாண்ட பிறகு கதாயுத யுத்தம் தொடங்கியது. துரியோதனனு டைய கதையைத் தாக்கினான் பீமன். அவனுடைய கதாயுதம் மேலே எழும்பிற்று. அதைப் பிடிப்பதற்காக துரியோதனன் மேலே எம்பிப் பாய்ந்தான். இந்தத் தருணத்தில் கண்ணன் தனது தொடையைத் தட்டி சைகை காட்டி, துரியோதன னின் தொடையில் அடிக்கும்படி பீமனுக்கு உணர்த்தினான். ஆகாயத்தின் உயர்ந்த அரவக் கொடியோன் கதையைப் பிடித்துக்கொண்டு கீழே இறங்கும்போது பீமன் அவனது தொடையில் தன் கதையால் ஓங்கி அடித்தான். அலறித் துடித்துக்கொண்டு கீழே விழுந்த துரியோதனன் தன் உயிரை விட்டான். திரௌபதியின் கற்பின் ஆற்றல் துரியோதன னின் முடிவிற்கு சபதம் இட்டது. காந்தாரியின் கற்பின் சக்தி அவனைக் காப்பாற்ற முயன்றது. பாரதப் போர் தொடங்குவதற்கு முன்பாக தருமபுத்திரன், துரியோதனன் இருவரும் காந்தாரியை வந்து வணங்கும்போது, "எங்கு தர்மம் உள்ளதோ அங்கு வெற்றி நிச்சயம்' என்று ஆசி கூறிய காந்தாரியின் வாக்கு பொய்யாகாமல் பலித்துவிட்டது

இதில் காணப்படும் தர்மங்கள் எண்ணிலடங்காதவை.மகாபாரதக் கதையில் வீரம், சூழ்ச்சி என எத்தனையோ இருந்தாலும், தர்மத்தின் அடிப்படையில்தான் வெற்றி கிட்டியிருக்கிறதே தவிர, வீரத்தினாலோ சூழ்ச்சியினாலோ மட்டுமல்ல. வீரமும் சூழ்ச்சியும் தற்காலிக வெற்றியைத் தேடும் உபாயங்கள். ஆனால் நிலையான- அழி வில்லாத வெற்றிக்கு தர்மமே முற்றிலும் சாதனமாக இருந்தது. பாண்டவர்கள் தர்மத்தைவிட்டு சிறிதும் விலகாதவர்கள். கௌரவர்கள் சாதுக்க ளான பாண்டவர்களுக்கு வஞ்சகமும் சூழ்ச்சியும் செய்து துன்பத்தையே கொடுத்தனர். துன்மதி கொண்ட துரியோதனன் பக்கத்திலும் நல்லவர் கள் இருந்தார்கள். இந்தப் பட்டியலில் முக்கிய இடம் பெறுபவள் துரியோதனனைப் பெற்றவளான காந்தாரிதேவியே. காந்தார தேசத்து இளவரசியான காந்தாரி, திருதராஷ்டிர மன்னன் பார்வை அற்றவன் என்று தெரிந்தேதான் மணம் புரிந்துகொண்டாள். பிறவிக் குருடனான திருதராஷ்டிரனை மணம் செய்துகொண்டபிறகு, தன் கணவன் காணாத இந்த உலகத்தை இனி தானும் பார்க்கக் கூடாது என்று, தன் இரண்டு கண்களையும் துணியால் கட்டிக்கொண்டு இறுதி வரை வாழ்ந்தாள். இவளுடைய பதிவிரதா தர்மத்தின் முன்பு பரந் தாமனான கண்ணனும் செயலிழந்து நின்றான். பாரதப் போர் கடுமையாக நடந்து பதினேழு நாட்கள் முடிந்துவிட்டன. குருஷேத்ர புண்ணிய பூமி குருதி வெள்ளத்தில் மிதந்தது. கௌரவ சேனையின் பாசறையில் சூன்யம் நிறைந்திருந்தது. அவர்கள் தரப்பில் போரிட்ட மாவீரர்கள் அனைவரும் மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்றுவிட்டார்கள். துரியோதனனுக்குத் துணையிருந்த நண்பன் கர்ணன், அருமைச் சகோதரர்கள், வஞ்சகமே உருவான சகுனி மாமன் யாவருமே இப்போது இல்லை. கௌரவர்களுக்காக- அஸ்தினாபுர அரசைக் காப்பதற்காகவே இருந்த பீஷ்ம பிதாமகர், உயிரை விடாமல் உத்திராயண புண்ணிய காலத்தை எதிர்பார்த்துக்கொண்டு வெட்டப் பட்ட மரம்போல அம்புப் படுக்கையில் சயனித்து விட்டார். தனித்து விடப்பட்ட அஸ்தினாபுரத்து இளவல் தன்னந்தனியாகத் தவிக்கிறான். சித்தம் தடுமாறி நிலை குலைந்து நிற்கிறான். பாண்டவர் பக்கம் வெற்றி கிட்டும் நிலை. துரியோதனனின் மனம் கொந்தளிக்கிறது; எதை யெல்லாமோ எண்ணுகிறது. அன்று பரமாத்மா கண்ணன் சொன்ன சொற்கள் நினைவில் நிழலாடுகிறது. "தர்மத்தை சூது கவ்வும்; காலம் வரும்போது தர்மமே வெல்லும் என்று சொன்னானே! அந்தக் காலம் வந்துவிட்டதே. எனக்குத் துணையாக யாருமே இல் லையே!' என்று கலங்குகிறான். அன்று அரச சபையில் "பாவி துச்சாதனனின் செந்நீர், துரியோதனனின் ரத்தம், மேவி இரண்டும் கலந்து குழலில் பூசி, நறுநெய் குளித்தபிறகே சீவிக் குழல் முடிப்பேன்' என்று கூந்தலைக் கலையவிட்ட பாஞ்சாலியின் சபதம் ஈட்டியாகக் குத்துகிறது. இருண்ட பாசறையில் தன்னந்தனி யாகப் புலம்பித் தவிக்கிறான். கூடாரத்தில் எங்கேயோ இருந்த பகடைக்காய்கள் அவனைப் பார்த்து சிரிப்பது போன்ற ஒரு பிரமை. வெறிபிடித்தவன்போல அங்கும் இங்கும் நடக்கிறான். பாசறைக் கதவருகே ஏதோ நிழலாடுகிறது. யாரோ வரும் காலடிச் சப்தமும் கேட்கிறது. திரும்பிப் பார்க்கிறான். அங்கே அவனைப் பெற்ற அன்னை காந்தாரி நிற்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டு, ""அம்மா, நீங்களா? என்ன இந்த வேளையில்... அதுவும் யுத்த பூமியில்?'' என்று வேதனையோடு கேட்டான். ""அன்பு மகனே, உன் நிலையை அறிந்து தாயான நான் எப்படி நிம்மதியாக இருப்பேன். குழந்தையின் தவிப்பை தாயையன்றி யார்தான் அறிவார். வருந்தாதே மகனே'' என்று அவன் தலையை அன்போடு வருடினாள். வணங்காமுடியான துரியோதனனுக்கு தாயின் வருடல் இதமளிக்கிறது. ""அம்மா! நாளை நடக்கும் போரில் எனக்கு மரணம் நிச்சயமென்று என் உள்ளுணர்வு அச்சுறுத்துகிறது'' என்றான். மகனின் நிலைகண்டு அன்பு மேலிட, ""கௌரவக் குலத்தோன்றலே! நீயா மரணத்தைக் கண்டு அச்சப்படுகிறாய். கோழையாகி விடாதே. நீ மரணத்திலிருந்து தப்ப வழியுண்டு மகனே. உன்னை யாரும் வெல்ல முடியாது. அதற்கு உபாயம் சொல்லத்தான் உன்னைத் தேடிவந்தேன்'' என்றாள் வாஞ்சையோடு. ""என்ன சொல்கிறீர்கள் தாயே?'' என்றான் துரியோதனன் ஆச்சரியத்தோடு. ""சுவேதனா! எனது கற்பு நெறியும் பதிவிரதா தர்மமும் உண்மையாக இருக்கு மாயின், உன்னை யாராலும்- எந்த அஸ்திரத்தினாலும் வெல்ல முடியாது. மரணமும் உன்னைத் தீண்டாது. நான் சொல்வதை நீ செய்யவேண்டும்'' என்றாள். ""சொல்லுங்கள் தாயே!'' ""துரியோதனா, இந்தப் போர்க்களத்தின் அருகிலுள்ள தடாகத்தில் குளித்துவிட்டு, பிறந்த மேனியாக என்னிடம் வா. எந்தவிதமான ஆடையோ ஆபரணமோ உன் மேனியில் இருக் கக்கூடாது. இத்தனைக் காலமாகக் கட்டியிருந்த கண் களைத் திறந்து, என் பரிபூரணமான கடாட்சத் தைப் பொழிந்து உன்னை ஆசீர்வதிக்கிறேன். எனது நயன தீட்சை உன் மேனியில் பட்டு விட்டால் உனக்கு மரணம் கிடையாது. விரை வாகப் போய் வா மகனே'' என்று துரிதப்படுத்தி னாள் காந்தாரி. ""அப்படியே தாயே'' என்று ஆனந்தமாக தடாகத்தை நோக்கி ஓடினான் காந்தாரி மைந்தன். அதேவேளை பாண்டவர் பாசறையில் இருந்த கண்ணனின் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. துரியோதனனின் பாசறையில் காந்தாரிக்கும் துரியோதனனுக்கும் நடந்த உரையாடல்கள் எல்லாம் சர்வ வியாபியான கண்ணன் அறிந்துகொண்டான். காந்தாரியின் கற்பின் ஆற்றலையும், அவளுடைய பதிவிரதா தர்மத்தின் பவித்ரத்தையும் அறிந்த கண்ணன் கவலைப்படலானான். கடவுளான கண்ணனே கவலைப்படுவதா? ஆம்; காந்தாரியின் கற்பு எதையும் செய்யவல்லது. காந்தாரியின் திட்டப்படி துரியோதனன் தடாகத்தில் நீராடிவிட்டு பிறந்த மேனியோடு வந்து அவளுடைய நயன தீட்சையையும் ஆசி களையும் பெற்றுவிட்டால் அவனை யாருமே வெல்ல முடியாது. பதிவிரதா தர்மத்தின் முன்பாக பார்த்தசாரதியான கண்ணனாலும் எதுவும் செய்யமுடியாது. பாஞ்சாலியின் அவிழ்ந்த கூந்தலும் சபதமும் மாதவனுடைய மனதில் தோன்றுகிறது. பாண்டவ தூதன் கண்ணன் பாசறைக்கு வெளியே வந்து தடாகத்தை நோக்கி விரைந்தான். நட்ட நடுநிசி. யாரும் அறியாமல் மறைவான இடத்தில் நின்றான் மாயக்கண்ணன். காந்தாரி மைந்தன் தடாகத்தில் மூழ்கி நீராடியபின் பிறந்த மேனியுடன் நீர்த்திவலைகள் உடம்பில் வழிய மேலே எழுந்தான். அப்போது மெல்லிய குழலோசை கேட்கிறது. "என்ன இது! இந்த நள்ளிரவில் யார் குழலை இசைக்கிறார்கள்? எல்லாம் அந்த மாயாவி கிருஷ்ணன் வேலையாகத் தான் இருக்கும். அவர் வருவதற்குள் தாயிடம் சென்று விட வேண்டும்' என்று துடிப்புடன் கிளம்பும் போது, கபடமாகச் சிரித்தபடி எதிரிலே வந்து நின்றான் கண்ணன். அதைக் கண்டு அதிர்ச்சி யடைந்து நின்றுவிட்டான் துரியோதனன். ""கௌரவக் குலத் தோன்றலே! என்ன இது? ஏனிந்த அவலம்? எதற்காக இந்த விபரீத விளையாட்டு! எல்லா சாஸ்திரங்களும் அறிந்தவன்தானே நீ? இந்த மதியீனமான காரியம் செய்ய எப்படித் துணிந்தாய்?'' என்றான் கண்ணன். ""கண்ணா! நேரத்தை வீணாக்காமல் வழியை விடு. நான் உடனே என் தாயைக் காணவேண்டும். இந்த இடத்தை விட்டுச் சென்றுவிடு'' என்றான் வெறுப்போடு. ""துரியோதனா! நீ செய்யும் காரியம் சரியானது அல்ல. என்னதான் தாயாக இருந்தாலும் அவளும் ஒரு பெண்தானே. தோளுக்குமேல் போனால் தோழன் என்பார்கள். இத்தனை வயது கடந்த ஆண் மகன் பிறந்த மேனியோடு எந்தப் பெண்ணையாவது பார்ப்பானா? உன் வீரமும் ஆற்றலும் எங்கே போயிற்று? நீ செய்யும் இந்தக் கேவலமான காரியம் பெண்மையையே இழிவுபடுத்துவதாக உள்ளதே!'' என்றான் கண்ணன் விஷமச் சிரிப்போடு. துரியோதனன் ஒரு வினாடி குழம்பி, ""கண்ணா, என்னிடம் தற்போது ஆடை எதுவுமே இல்லை'' என்றான் பரிதாபமாக. கண்ணன் அவசரமாக, ""துரியோதனா, கவலையை விடு. பக்கத்தில் உள்ள வாழை இலையைப் பறித்து உனது இடுப்பில் மட்டுமாவது மறைத்துக்கொண்டு உன் மாதாவிடம் செல்'' என்று சொல்லிவிட்டு, தான் வந்த வேலை முடிந்துவிட்ட திருப்தியோடு அங்கிருந்து நகர்ந்தான். ""அம்மா, அம்மா'' என்று கூவியபடி ஆவலோடு வந்தான் துரியோதனன். மகனின் குரலைக் கேட்ட காந்தாரி, மகனைப் பார்த்து அருளைப் பொழிய வேண்டும் என்று தன் கண்களின் கட்டுகளை அவிழ்த்தாள். தன் சக்தியை எல்லாம் திரட்டி தன் மகனின் தலையிலிருந்து ஒவ்வொரு அங்கமாக தனது பார்வையைச் செலுத்திக்கொண்டே வந்த காந்தாரி, இடுப்பிற்குக் கீழே இலை ஒன்று மூடியிருப்பதைக் கண்டு தீயை மிதித்தவள்போல அதிர்ச்சியானாள். தனது கற்பின் சக்தியாலும், பதிவிரதா தர்மத்தின் ஆற்றலாலும் தன் மகனைக் காப்பாற்றிவிடலாம் என்று திடமாக நம்பி வந்தாள். காந்தாரியின் எண்ணம் பலிக்கவில்லை. தனது பார்வை படமுடியாத இடுப்பிற்குக் கீழே துரியோதனன் தாக்கப்பட்டால் அவன் அழிவு நிச்சயம் என்பதை எண்ணி கண்ணீர் வடித்தாள். பதினெட்டாம் நாள் யுத்தம். பீமனுக்கும் துரியோதனனுக்கும் கடும் போர். எல்லாவித அஸ்திரங்களையும் கையாண்ட பிறகு கதாயுத யுத்தம் தொடங்கியது. துரியோதனனு டைய கதையைத் தாக்கினான் பீமன். அவனுடைய கதாயுதம் மேலே எழும்பிற்று. அதைப் பிடிப்பதற்காக துரியோதனன் மேலே எம்பிப் பாய்ந்தான். இந்தத் தருணத்தில் கண்ணன் தனது தொடையைத் தட்டி சைகை காட்டி, துரியோதன னின் தொடையில் அடிக்கும்படி பீமனுக்கு உணர்த்தினான். ஆகாயத்தின் உயர்ந்த அரவக் கொடியோன் கதையைப் பிடித்துக்கொண்டு கீழே இறங்கும்போது பீமன் அவனது தொடையில் தன் கதையால் ஓங்கி அடித்தான். அலறித் துடித்துக்கொண்டு கீழே விழுந்த துரியோதனன் தன் உயிரை விட்டான். திரௌபதியின் கற்பின் ஆற்றல் துரியோதன னின் முடிவிற்கு சபதம் இட்டது. காந்தாரியின் கற்பின் சக்தி அவனைக் காப்பாற்ற முயன்றது. பாரதப் போர் தொடங்குவதற்கு முன்பாக தருமபுத்திரன், துரியோதனன் இருவரும் காந்தாரியை வந்து வணங்கும்போது, "எங்கு தர்மம் உள்ளதோ அங்கு வெற்றி நிச்சயம்' என்று ஆசி கூறிய காந்தாரியின் வாக்கு பொய்யாகாமல் பலித்துவிட்டது.....................................

                                            பகிர்வில் ர.சடகோபால்.BA                                                            

விநாயகர் தத்துவம்

தோப்புக்கரணம் போடுவது ஏன்?
                                
                              புகைப்படம்: விநாயகர்  தத்துவம்
தோப்புக்கரணம் போடுவது ஏன்?
 
 
விஷ்ணு தாம் காத்தல் தொழில் புரிய வேண்டி அதற்காக சில ஆயுதங்களைப் பெற்றார். அதில் ஒன்று சக்ராயுதம். அவர் அச்சக்கரத்தை ஒரு போரில் ததீசி என்ற முனிவர் மேல் ஏவ அது சக்தி இழந்து திரும்பி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விஷ்ணு வேறு ஒரு வலிமையான ஆயுதம் வாங்குவதற்காக சிவனை வழிபடச் சென்றார்.

அப்போது வாசலில் இருந்த விநாயகப் பெருமானை வணங்காமல் விஷ்ணு உள்ளே சென்றார். இதனால் விஷ்ணு மீது விநாயகருக்கு கோபம் வந்தது. இதை அறியாத விஷ்ணு சிவனை போற்றி வணங்கி 1000 தாமரை மலர்களால், சிவனின் ஆயிரம் திருநாமங்களாகிய "சஹஸ்ர நாமம்'' கூறி ஒவ்வொரு மலராக அர்ச்சனை செய்தார்.

மனம் மகிழ்ந்த சிவபெருமான் முன்பொருசமயம் ஜலந்தராசுரன் என்ற அரக்கனை மாய்க்க தம் கால் நகங்களால் உருவாக்கி இருந்த சுதர்சனம் எனும் சக்கரப்படையை விஷ்ணுவுக்கு கொடுத்தார். விஷ்ணு திரும்பி வரும்போது வாயிலில் இருந்த விநாயகப் பெருமான் வழிமறித்தார். விஷ்ணுவின் கையிலிருந்த சுதர்சனக் சக்கரத்தை பிடுங்கி தம் வாயில் போட்டுக் கொண்டார்.

அதனைக் கண்டு அதிர்ந்த விஷ்ணு, தாம் விநாயகப் பெருமானை வணங்காது சென்றது தவறுதான் என்பதை உணர்ந்தார். அவரை வணங்கி, தமது நான்கு திருக்கரங்களாலும் இருகாதுகளையும் பற்றிக்கொண்டு பலமுறை உட்கார்ந்து எழுந்து தோர்பி, கர்ணம் இட்டார். இந்த செயல் பார்க்க மிகவும் நகைச்சுவையாக இருந்ததால் விநாயகர் தம் கோபம் மறந்து விழுந்து விழுந்து சிரித்தார்.அப்போது அவர் வாயில் இருந்த சுதர்சனச் சக்கரம் வெளியில் விழுந்தது. அதனை எடுத்து விநாயகப் பெருமானிடம் வணங்கி ஆசி பெற்றார் விஷ்ணு. (இந்த கணபதி விகடச்சக்கர விநாயகர் என போற்றப்படுகிறார். இவர் காஞ்சீபுரம் கோவிலில் வீற்றிருந்து அருளாட்சி செய்கிறார்). இப்படி தோப்புக்கரணம் போட்டால் விநாயகர் மகிழ்ந்து அருள் புரிவார் என்பதாலேயே இச்செயல் நடைமுறைக்கு வந்தது.....

விஷ்ணு தாம் காத்தல் தொழில் புரிய வேண்டி அதற்காக சில ஆயுதங்களைப் பெற்றார். அதில் ஒன்று சக்ராயுதம். அவர் அச்சக்கரத்தை ஒரு போரில் ததீசி என்ற முனிவர் மேல் ஏவ அது சக்தி இழந்து திரும்பி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விஷ்ணு வேறு ஒரு வலிமையான ஆயுதம் வாங்குவதற்காக சிவனை வழிபடச் சென்றார்.


அப்போது வாசலில் இருந்த விநாயகப் பெருமானை வணங்காமல் விஷ்ணு உள்ளே சென்றார். இதனால் விஷ்ணு மீது விநாயகருக்கு கோபம் வந்தது. இதை அறியாத விஷ்ணு சிவனை போற்றி வணங்கி 1000 தாமரை மலர்களால், சிவனின் ஆயிரம் திருநாமங்களாகிய "சஹஸ்ர நாமம்'' கூறி ஒவ்வொரு மலராக அர்ச்சனை செய்தார்.


மனம் மகிழ்ந்த சிவபெருமான் முன்பொருசமயம் ஜலந்தராசுரன் என்ற அரக்கனை மாய்க்க தம் கால் நகங்களால் உருவாக்கி இருந்த சுதர்சனம் எனும் சக்கரப்படையை விஷ்ணுவுக்கு கொடுத்தார். விஷ்ணு திரும்பி வரும்போது வாயிலில் இருந்த விநாயகப் பெருமான் வழிமறித்தார். விஷ்ணுவின் கையிலிருந்த சுதர்சனக் சக்கரத்தை பிடுங்கி தம் வாயில் போட்டுக் கொண்டார்.


அதனைக் கண்டு அதிர்ந்த விஷ்ணு, தாம் விநாயகப் பெருமானை வணங்காது சென்றது தவறுதான் என்பதை உணர்ந்தார். அவரை வணங்கி, தமது நான்கு திருக்கரங்களாலும் இருகாதுகளையும் பற்றிக்கொண்டு பலமுறை உட்கார்ந்து எழுந்து தோர்பி, கர்ணம் இட்டார். இந்த செயல் பார்க்க மிகவும் நகைச்சுவையாக இருந்ததால் விநாயகர் தம் கோபம் மறந்து விழுந்து விழுந்து சிரித்தார்.


அப்போது அவர் வாயில் இருந்த சுதர்சனச் சக்கரம் வெளியில் விழுந்தது. அதனை எடுத்து விநாயகப் பெருமானிடம் வணங்கி ஆசி பெற்றார் விஷ்ணு. (இந்த கணபதி விகடச்சக்கர விநாயகர் என போற்றப்படுகிறார். இவர் காஞ்சீபுரம் கோவிலில் வீற்றிருந்து அருளாட்சி செய்கிறார்). இப்படி தோப்புக்கரணம் போட்டால் விநாயகர் மகிழ்ந்து அருள் புரிவார் என்பதாலேயே இச்செயல் நடைமுறைக்கு வந்தது.....


                                           பகிர்வில் ர.சடகோபால் .BA 

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

சிவலிங்கம் காட்டுவது என்ன


சிவலிங்கம் காட்டுவது என்ன...? 

                                     புகைப்படம்: சிவலிங்கம் காட்டுவது என்ன...?
சிவலிங்கம் காட்டுவது என்ன...? 

கடவுள் உண்டா இல்லையா என்ற வாதம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது கடவுளுக்கு உருவம் இருக்கிறதா? இல்லையா? என்பது மூல பரம்பொருள் என்று அழைக்கப்படும் ஆதி மூல வஸ்துக்கு உருவம் தேவையில்லை அது இயக்கங்கள் அனைத்திற்கும் ஆதார இயக்கு சக்தியாக இருப்பதனால் உருவம் என்பது இல்லாமலேயே அதுவால் இயங்க முடியுமென்று இயக்க முடியுமென்று சிலர் சொல்கிறார்கள்

இல்லாத ஒன்று இயங்க இயலாது இயங்கும் அனைத்துக்கும் உருவம் வேண்டும் உருவம் இல்லை என்றால் இயக்கத்தை அறிந்துகொள்ள முடியாது அனுபவிக்கவும் முடியாது எனவே அனைத்தையும் இயங்க வைக்கும் ஆதி சக்தியான கடவுள் உருவத்துடனே இருக்கிறார் அவரை உருவாகவே தரிசிக்க முடியுமென்று சிலர் சொல்கிறார்கள்

இறைவன் எல்லாம் வல்லவன் அவரால் ஆகாதது என்று உலகில் எதுவும் இல்லை அப்படி சர்வசக்தி வாய்ந்த கடவுள் உருவம் இல்லாமலும் இருக்கலாம் உருவத்தோடும் இருக்கலாம் அருவுருவாக இருக்கும் பரம்பொருளை தியானிக்க வேண்டியதே ஜீவர்களின் லட்சியம் என்று சிலர் சொல்கிறார்கள் இந்த மூன்று கருத்துக்களும் முடிவே இல்லாமல் உலக முழுவதும் இன்றுவரை விவாதிக்கப்பட்டு வருகிறது

கடவுள் விஷயத்திலும் சரி மற்ற எந்த விஷயத்திலும் சரி அநுபூதி ஒன்றே இறுதி முடிவு என்பது இந்துமதத்தின் மைய கருத்து அதாவது அனுபவத்தால் பெறுகின்ற விடையே இறுதியானது உண்மையானது என்பது இதன் பொருளாகும் அதனாலேயே இறைவனை பற்றி பேசும்போது இந்துமதம் சகுன நிர்குண பிரம்மம் என்று வலியுறுத்தி பேசுகிறது அதாவது அருவுருவான பரம்பொருள் என்பது இதன் ஆதார சுருதியாகும்

அருவுருவான அதாவது உருவம் உடைய உருவம் இல்லாத கடவுளை மனித சிந்தனைய்க்கு எப்படி அடையாள படுத்தி காட்ட முடியுமென்று சிந்தித்த நமது ஞான புருசர்கள் இறைவனின் அருவுரு தன்மையை சிவலிங்கம் மூலம் கண்டறிந்து மற்றவர்களுக்கு வெளிப்படுத்தினார்கள் லிங்கம் என்பது அநாதி காலம் தொட்டு பக்தர்களால் வழிபடப்பட்டு வருவதற்கு இந்த அருவுருவ தத்துவமே மூலம் எனலாம்.

அண்ட சராசரங்கள் அனைத்தையும் கடந்த சிவபெருமான் என்ற மூல பரம்பொருளின் பரத்துவ நிலையை உணர்த்துவது தான் சிவலிங்கமாகும் நிற்குனமான இறைவனின் நிலையை வெளிப்படுத்தும் சிவலிங்கம் மூன்று பகுதிகளை தனக்குள் கொண்டது லிங்கத்தின் பாணபகுதி என்று அழைக்கப்படும் உச்சிபகுதி சிவபாகம் ஆகும் இது பிரபஞ்சத்தின் சம்ஹாரத்தை காட்டுவதாகும் நடுப்பகுதியான ஆவுடையார் மூலபரம்பொருள் காக்கும் சக்தியாக திகழும் விஷ்ணுவை தனக்குள் கொண்டதாகும் கடேசியாக உள்ள அடிப்புறபகுதி சிருஷ்டி என்பது உலகங்களின் அஸ்திவாரம் என்பதை காட்டும் பிரம்ம பகுதியாகும் படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழிலும் இறைவன் ஒருவனிடத்தில் இருந்தே நடைபெறுகிறது என்பதை தெளிவாக காட்டும் தத்துவமே சிவலிங்கம்

நாம் சிவலிங்கத்தை லிங்கம் என்ற ஒரே பெயரால் அழைத்தாலும் அதற்கு பல பெயர்கள் இருக்கிறது அதாவது இறைவன் உயிர்களுக்கு சாநித்தியராய் நின்று அருள்செயும் லிங்கத்தை பரார்த்த லிங்கம் என்றும் தானாக தோன்றியதை சுயம்பு லிங்கம் என்றும் தேவர்கள் உருவாக்கியதை கண லிங்கம் என்றும் பிரம்மன் மற்றும் விஷ்ணுவால் உருவாக்கப்பட்டதை தைவீக லிங்கம் என்றும் முனிவர்கள் அசுரர்கள் ஆகியோரால் உருவாக்கப்பட்டதை ஆரிட லிங்கம் என்றும் மனிதர்கள் செய்ததை மானுட லிங்கம் என்றும் மண் அரிசி வெண்ணை சந்தனம் புஷ்பம் சக்கரை மாவு ஆகியவற்றால் உருவானதை சணிக லிங்கம் என்றும் அழைக்கிறார்கள்

சகலாதிகரம்,காசியப சிற்ப சாஸ்திரம் ,கந்தபுராணம், தென் குடி திட்டை புராணம்,சிவபரக்ரமம் ஆகிய பழம்பெரும் நூல்கள் சிவலிங்கத்தின் நான்கு வகைகளை பற்றி பேசுகிறது தாளக்குடை போன்ற வடிவுடைய சத்ரகாரம் கோழிமுட்டை வடிவுடைய குக்குண்டாகாரம் வெள்ளரி பழம் வடிவுடைய திருபுடாகாரம் பாதிநிலா வடிவுடைய அர்த்த சந்திராகாரம் என்று லிங்கத்தின் நான்கு வித வடிவங்களுக்கு பெயர் சூட்டி நமக்கு தெரியபடுத்துகின்றது

இதுதவிர ஆயிரம் முகம் கொண்ட பாணலிங்கம் முதல் ஐந்து முகம் கொண்ட பாணலிங்கம் வரை இருக்கிறது முத்து பவளம் வைடூர்யம் படிகம் மரகதம் நீலம் மாணிக்கம் வைரம் கோமேதகம் ஆகிய ரத்தினங்களிலும் சிவலிங்கத்தை உருவாக்கலாம் என்று பல சிற்ப சாஸ்திர நூல்கள் கூறுகின்றன சிவலிங்கம் செய்ய பயன்படும் ரத்தினங்கள் குற்றமற்றவைகலாக இருக்க வேண்டும் அதன் அளவு இரண்டு அங்கலம் முதல்கொண்டு ஆறு அங்குலம் வரை இருக்கலாம் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன

ஆலயங்களில் உள்ள லிங்கங்களை தவிர மேற்சொன்ன பொருட்களில் லிங்க வடிவங்களை செய்து வீட்டில் வைத்து வழிபட்டால் அரச உறவு தீர்க்க ஆயுள் ஆரோக்கிய உடம்பு செல்வ வளர்ச்சி பகைவர் வீழ்ச்சி நன்மக்கள் பேறு சர்வ வசியம் ஏற்படும் என்று நமது முன்னோர்கள் வரையறுத்து வைத்திருக்கிறார்கள்

இந்துமத வழிபாடுகள் எனபது தத்துவங்களையும் விஞ்ஞான ரகசியங்களையும் மட்டும் கொண்டது அல்ல சாதாரண மனிதனின் அன்றாட பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்வதற்கு கூட இந்து மத வழிபாட்டு முறைகள் தவறுவது இல்லை அதனால் தான் ஆயிரம் வருடங்கள் அந்நிய காட்டுமிராண்டி மதத்தவர்கள் கண்மூடி தனமான தாக்குதல் நடத்தினாலும் இன்றும் புத்திளமையோடு திகழ்கிறது நாளையும் திகழும்.!

கடவுள் உண்டா இல்லையா என்ற வாதம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது கடவுளுக்கு உருவம் இருக்கிறதா? இல்லையா? என்பது மூல பரம்பொருள் என்று அழைக்கப்படும் ஆதி மூல வஸ்துக்கு உருவம் தேவையில்லை அது இயக்கங்கள் அனைத்திற்கும் ஆதார இயக்கு சக்தியாக இருப்பதனால் உருவம் என்பது இல்லாமலேயே அதுவால் இயங்க முடியுமென்று இயக்க முடியுமென்று சிலர் சொல்கிறார்கள்

இல்லாத ஒன்று இயங்க இயலாது இயங்கும் அனைத்துக்கும் உருவம் வேண்டும் உருவம் இல்லை என்றால் இயக்கத்தை அறிந்துகொள்ள முடியாது அனுபவிக்கவும் முடியாது எனவே அனைத்தையும் இயங்க வைக்கும் ஆதி சக்தியான கடவுள் உருவத்துடனே இருக்கிறார் அவரை உருவாகவே தரிசிக்க முடியுமென்று சிலர் சொல்கிறார்கள்

இறைவன் எல்லாம் வல்லவன் அவரால் ஆகாதது என்று உலகில் எதுவும் இல்லை அப்படி சர்வசக்தி வாய்ந்த கடவுள் உருவம் இல்லாமலும் இருக்கலாம் உருவத்தோடும் இருக்கலாம் அருவுருவாக இருக்கும் பரம்பொருளை தியானிக்க வேண்டியதே ஜீவர்களின் லட்சியம் என்று சிலர் சொல்கிறார்கள் இந்த மூன்று கருத்துக்களும் முடிவே இல்லாமல் உலக முழுவதும் இன்றுவரை விவாதிக்கப்பட்டு வருகிறது

கடவுள் விஷயத்திலும் சரி மற்ற எந்த விஷயத்திலும் சரி அநுபூதி ஒன்றே இறுதி முடிவு என்பது இந்துமதத்தின் மைய கருத்து அதாவது அனுபவத்தால் பெறுகின்ற விடையே இறுதியானது உண்மையானது என்பது இதன் பொருளாகும் அதனாலேயே இறைவனை பற்றி பேசும்போது இந்துமதம் சகுன நிர்குண பிரம்மம் என்று வலியுறுத்தி பேசுகிறது அதாவது அருவுருவான பரம்பொருள் என்பது இதன் ஆதார சுருதியாகும்

அருவுருவான அதாவது உருவம் உடைய உருவம் இல்லாத கடவுளை மனித சிந்தனைய்க்கு எப்படி அடையாள படுத்தி காட்ட முடியுமென்று சிந்தித்த நமது ஞான புருசர்கள் இறைவனின் அருவுரு தன்மையை சிவலிங்கம் மூலம் கண்டறிந்து மற்றவர்களுக்கு வெளிப்படுத்தினார்கள் லிங்கம் என்பது அநாதி காலம் தொட்டு பக்தர்களால் வழிபடப்பட்டு வருவதற்கு இந்த அருவுருவ தத்துவமே மூலம் எனலாம்.

அண்ட சராசரங்கள் அனைத்தையும் கடந்த சிவபெருமான் என்ற மூல பரம்பொருளின் பரத்துவ நிலையை உணர்த்துவது தான் சிவலிங்கமாகும் நிற்குனமான இறைவனின் நிலையை வெளிப்படுத்தும் சிவலிங்கம் மூன்று பகுதிகளை தனக்குள் கொண்டது லிங்கத்தின் பாணபகுதி என்று அழைக்கப்படும் உச்சிபகுதி சிவபாகம் ஆகும் இது பிரபஞ்சத்தின் சம்ஹாரத்தை காட்டுவதாகும் நடுப்பகுதியான ஆவுடையார் மூலபரம்பொருள் காக்கும் சக்தியாக திகழும் விஷ்ணுவை தனக்குள் கொண்டதாகும் கடேசியாக உள்ள அடிப்புறபகுதி சிருஷ்டி என்பது உலகங்களின் அஸ்திவாரம் என்பதை காட்டும் பிரம்ம பகுதியாகும் படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழிலும் இறைவன் ஒருவனிடத்தில் இருந்தே நடைபெறுகிறது என்பதை தெளிவாக காட்டும் தத்துவமே சிவலிங்கம்

நாம் சிவலிங்கத்தை லிங்கம் என்ற ஒரே பெயரால் அழைத்தாலும் அதற்கு பல பெயர்கள் இருக்கிறது அதாவது இறைவன் உயிர்களுக்கு சாநித்தியராய் நின்று அருள்செயும் லிங்கத்தை பரார்த்த லிங்கம் என்றும் தானாக தோன்றியதை சுயம்பு லிங்கம் என்றும் தேவர்கள் உருவாக்கியதை கண லிங்கம் என்றும் பிரம்மன் மற்றும் விஷ்ணுவால் உருவாக்கப்பட்டதை தைவீக லிங்கம் என்றும் முனிவர்கள் அசுரர்கள் ஆகியோரால் உருவாக்கப்பட்டதை ஆரிட லிங்கம் என்றும் மனிதர்கள் செய்ததை மானுட லிங்கம் என்றும் மண் அரிசி வெண்ணை சந்தனம் புஷ்பம் சக்கரை மாவு ஆகியவற்றால் உருவானதை சணிக லிங்கம் என்றும் அழைக்கிறார்கள்

சகலாதிகரம்,காசியப சிற்ப சாஸ்திரம் ,கந்தபுராணம், தென் குடி திட்டை புராணம்,சிவபரக்ரமம் ஆகிய பழம்பெரும் நூல்கள் சிவலிங்கத்தின் நான்கு வகைகளை பற்றி பேசுகிறது தாளக்குடை போன்ற வடிவுடைய சத்ரகாரம் கோழிமுட்டை வடிவுடைய குக்குண்டாகாரம் வெள்ளரி பழம் வடிவுடைய திருபுடாகாரம் பாதிநிலா வடிவுடைய அர்த்த சந்திராகாரம் என்று லிங்கத்தின் நான்கு வித வடிவங்களுக்கு பெயர் சூட்டி நமக்கு தெரியபடுத்துகின்றது

இதுதவிர ஆயிரம் முகம் கொண்ட பாணலிங்கம் முதல் ஐந்து முகம் கொண்ட பாணலிங்கம் வரை இருக்கிறது முத்து பவளம் வைடூர்யம் படிகம் மரகதம் நீலம் மாணிக்கம் வைரம் கோமேதகம் ஆகிய ரத்தினங்களிலும் சிவலிங்கத்தை உருவாக்கலாம் என்று பல சிற்ப சாஸ்திர நூல்கள் கூறுகின்றன சிவலிங்கம் செய்ய பயன்படும் ரத்தினங்கள் குற்றமற்றவைகலாக இருக்க வேண்டும் அதன் அளவு இரண்டு அங்கலம் முதல்கொண்டு ஆறு அங்குலம் வரை இருக்கலாம் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன

ஆலயங்களில் உள்ள லிங்கங்களை தவிர மேற்சொன்ன பொருட்களில் லிங்க வடிவங்களை செய்து வீட்டில் வைத்து வழிபட்டால் அரச உறவு தீர்க்க ஆயுள் ஆரோக்கிய உடம்பு செல்வ வளர்ச்சி பகைவர் வீழ்ச்சி நன்மக்கள் பேறு சர்வ வசியம் ஏற்படும் என்று நமது முன்னோர்கள் வரையறுத்து வைத்திருக்கிறார்கள்

இந்துமத வழிபாடுகள் எனபது தத்துவங்களையும் விஞ்ஞான ரகசியங்களையும் மட்டும் கொண்டது அல்ல சாதாரண மனிதனின் அன்றாட பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்வதற்கு கூட இந்து மத வழிபாட்டு முறைகள் தவறுவது இல்லை அதனால் தான் ஆயிரம் வருடங்கள் அந்நிய காட்டுமிராண்டி மதத்தவர்கள் கண்மூடி தனமான தாக்குதல் நடத்தினாலும் இன்றும் புத்திளமையோடு திகழ்கிறது நாளையும் திகழும்.!

                                                     பகிர்வில் ர.சடகோபால் .BA 

காளியின் வரலாறு


காளியின் வரலாறு

புகைப்படம்: காளியின் வரலாறு
தாருகன் என்று ஓர் அரக்கன் இருந்தான். அவன் சிறந்த சிவ பக்தன். சிவபெருமானை நோக்கி கடுமையான தவமிருந்தான். அவனது தவத்திற்கு இரங்கிய சிவபெருமான், அவன் முன்பாக தோன்றினார். என்ன வரம் வேண்டும் எனக் கேட்டார். 

தனக்கு ஒரு வரம் வேண்டும் என்றும், இளம் பெண்ணைத் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்றும் கேட்டான் தாருகன். சிவபெருமானும் அவன் விருப்பப்படியே வரத்தைக் கொடுத்து அருளாசி வழங்கி மறைந்தார். வரம் பெற்ற தாருகனிடம் அநியாயம் தலைதூக்கியது. அவனது ஆட்டம் அதிகமானது. 

அசுரனான அவன் தேவர்களுக்கு அளவில்லா துயரத்தைக் கொடுக்கத் தொடங்கினான். அவனைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவபெருமானிடம் ஓடிச் சென்று முறையிட்டனர். சற்றே யோசித்த சிவபெருமான், தன் வலது கரத்தால் தன் கண்டத்தில் இருக்கும் விஷத்தைத் தடவினார். 

அடுத்த நொடி அங்கு ஒரு அழகிய பெண் தோன்றினாள். அற்புத அழகுடனும், தீட்சண்யமான பார்வையுடனும் அவதரித்த அந்தப் பெண்ணே காளிதேவி ஆவாள். கண்டத்திலிருந்து உருவான காளிதேவி, சிவபெருமானை வணங்கி நின்றாள். 

‘நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று சிவபெருமானிடம் கேட்டாள் காளிதேவி. ‘தாருகன் என்ற அசுரனை அழித்து வா’ எனக் கட்டளையிட்டார் சிவபெருமான். காளிதேவி ஒரு பெரிய படையை உருவாக்கி தாருகனுடன் போரிட்டு அவனை வதம் செய்து அழித்தாள். 

சிவனால் தோற்றுவிக்கப்பட்ட காளிதேவி பல பெயர்களில் அழைக்கப்படுகிறாள். வரதான சொரூபிணி, நிகம்ப சூதனி, யோகப்பிடாரி, தாண்டவக் காளி, சுகாசனக் காளி எனப் பல பெயர்கள் காளிதேவிக்கு உண்டு. பக்தர்களை இன்முகத்துடன் பத்திரமாகக் காப்பதால் பத்ரகாளி என்றும் அழைக்கப்படுகிறாள்.

தாருகன் என்று ஓர் அரக்கன் இருந்தான். அவன் சிறந்த சிவ பக்தன். சிவபெருமானை நோக்கி கடுமையான தவமிருந்தான். அவனது தவத்திற்கு இரங்கிய சிவபெருமான், அவன் முன்பாக தோன்றினார். என்ன வரம் வேண்டும் எனக் கேட்டார். 

தனக்கு ஒரு வரம் வேண்டும் என்றும், இளம் பெண்ணைத் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்றும் கேட்டான் தாருகன். சிவபெருமானும் அவன் விருப்பப்படியே வரத்தைக் கொடுத்து அருளாசி வழங்கி மறைந்தார். வரம் பெற்ற தாருகனிடம் அநியாயம் தலைதூக்கியது. அவனது ஆட்டம் அதிகமானது. 

அசுரனான அவன் தேவர்களுக்கு அளவில்லா துயரத்தைக் கொடுக்கத் தொடங்கினான். அவனைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவபெருமானிடம் ஓடிச் சென்று முறையிட்டனர். சற்றே யோசித்த சிவபெருமான், தன் வலது கரத்தால் தன் கண்டத்தில் இருக்கும் விஷத்தைத் தடவினார். 

அடுத்த நொடி அங்கு ஒரு அழகிய பெண் தோன்றினாள். அற்புத அழகுடனும், தீட்சண்யமான பார்வையுடனும் அவதரித்த அந்தப் பெண்ணே காளிதேவி ஆவாள். கண்டத்திலிருந்து உருவான காளிதேவி, சிவபெருமானை வணங்கி நின்றாள். 

‘நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று சிவபெருமானிடம் கேட்டாள் காளிதேவி. ‘தாருகன் என்ற அசுரனை அழித்து வா’ எனக் கட்டளையிட்டார் சிவபெருமான். காளிதேவி ஒரு பெரிய படையை உருவாக்கி தாருகனுடன் போரிட்டு அவனை வதம் செய்து அழித்தாள். 

சிவனால் தோற்றுவிக்கப்பட்ட காளிதேவி பல பெயர்களில் அழைக்கப்படுகிறாள். வரதான சொரூபிணி, நிகம்ப சூதனி, யோகப்பிடாரி, தாண்டவக் காளி, சுகாசனக் காளி எனப் பல பெயர்கள் காளிதேவிக்கு உண்டு. பக்தர்களை இன்முகத்துடன் பத்திரமாகக் காப்பதால் பத்ரகாளி என்றும் அழைக்கப்படுகிறாள்.

                                         பகிர்வில் ர.சடகோபால் .BA 

சிவலிஙகம்{தத்துவம்}


சிவன் லிங்கமாக இருப்பதன் தத்துவம் என்ன?

புகைப்படம்: சிவன் லிங்கமாக இருப்பதன் தத்துவம் என்ன?

சிவம் என்றால் மங்களம். லிங்கம் என்றால் அடையாளம். மங்கள வடிவம் அது. மங்களம் என்றால் சுபம். சிவத்தை அதாவது சுபத்தை மனதில் இருத்தினால், சித்தம் சிவமாக மாறிவிடும். பிறப்பின் குறிக்கோள் அதுதான். பிறப்பின் முழுமையை சிவத்தின் சிந்தனை தந்துவிடுகிறது. நான் உன்னை வணங்குகிறேன் என்று சித்தத்தில் சிவனை இருத்திவிடு; உனது தேவைகள் அத்தனையும் உன்னை வந்தடையும் என்கிறது உபநிடதம் (தன்னம இத்யுபாசீத நம்யந்தெஸ்மைகாமா:) சிவத்தின் இணைப்பால் அம்பாளுக்கு ஸர்வமங்களா என்ற பெயர் கிடைத்தது. இயற்கை தெய்வன் அவன். பனி படர்ந்த மலையில் அமர்ந்து பனி வடிவாகவும் காட்சியளிப்பான். பாண லிங்கம் இயற்கையில் விளைந்தது. தாருகா வனத்தில்... ஈச்வரரின் அம்சம் பூமியில் விழுந்து லிங்க வடிவமாகக் காட்சியளித்ததாகப் புராணம் கூறும். மார்க்கண்டேயனை சிரஞ்ஜீவியாக்கியதும், கண்ணப்பனை மெய்யப்பனாக்கியதும் சிவலிங்கம்தான். கிடைத்த பொருளை, பிறருக்கு ஆதரவுடன் வாரி வாரி வழங்க, பொருளில் இருக்கும் பற்று படிப்படியாகக் குறைந்து, பற்றற்ற நிலை தோன்றிடும். அதற்குத் தியாகம் என்று பொருள்.
தியாகத்தின் பெருமையைச் சுட்டிக்காட்டுகிறது சிவலிங்கம். பிறக்கும்போது எந்தப் பொருளும் நம்முடன் ஒட்டிக்கொண்டு வருவதில்லை; இறக்கும்போதும் நம்முடன் சேர்ந்து வருவதில்லை. வாழ்நாளில் ஒட்டாத பொருளை ஒட்டிக்கொண்டு கவலைப்படுகிறோம்! பொருளை உன்னோடு ஒட்டிக்கொள்ளாதே. விட்டுவிடு. என்னைப்பார்... என்னில், எந்தப் பொருளும் ஒட்டுவதில்லை என்று சொல்லாமல் சொல்கிறது சிவலிங்கம். வாழ்க்கையின் முழுமை தியாகத்தில் விளையும் என்கிறது உபநிடதம் (த்யாகே நைகெ அமிருதத் தவமானசு:) லிங்கத்தில் எதை அர்ப்பணித்தாலும் ஒட்டிக்கொள்ளாது. அபிஷேகத் தண்ணீர் தங்காது, அணிகலன்கள் அணிய இயலாது; வஸ்திரம் உடுத்த இயலாது. அங்க அடையாளங்கள் தென்படாததால் அவன் உருவமற்றவன் என்பதை உணர்த்தும். சிலைக்கு அதாவது கல்லுக்கு, தட்பவெட்பத்தின் தாக்கம் தெரியாது; அதாவது, அது உணராது. சுக துக்கங்கள் தெரியாது. சொல்லப்போனால் சுகமும் துக்கமும் அதற்கு ஒன்றுதான். பனிப்பொழிவு என்றாலும் சரி, வெயில் கொளுத்தினாலும் சரி... அது அசையாது. சுக-துக்கங்களை சமமாகப் பார்க்கச் சொல்கிறது சிவலிங்கம். கண்ணனும் சுக - துக்கங்களைச் சமமாகப் பார் என்றே சொல்கிறான்.
சிவலிங்கம், மௌனமாக மனிதனுக்கு வழிகாட்டுகிறது. அசையாத சிவலிங்கம், உலகை அசைய வைத்து இயக்குகிறது. அவன் அசையாமலே உலகம் அசையும். உடல். உடலுறுப்புகள், மனம், வாக்கு, செயல்பாடு, அத்தனையும் இன்றி எங்கும் நிறைந்து உலகை இயக்கும் உலகநாதனான பரம்பொருள் நான்தான் என்று அடையாளம் காட்டுகிறது சிவலிங்கம். உடல் உறுப்புகள் இருந்தால்.. அவற்றின் மூலம் ஆசாபாசங்களில் சிக்கித் தவித்து வெளிவர முடியாமல் திண்டாடி கிடைத்த பிறவியை பயனற்றதாக்கும் நிலை ஏற்படும். ஆசைகளை அறுத்தெறிந்தால் நம் உடலுறுப்புகள் சிவத்தோடு இணைந்துவிடும்; பிறவிப் பயன் கிடைக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது சிவலிங்கம். வாயால் உபதேசிக்காமல் செயல்முறையில் விளக்கம் தருகிறது சிவலிங்கம். நடைமுறையில் நிகழ்வின் நிறைவில் மங்களம் பாடுவோம். மங்கள ஆரத்தி எடுப்போம். கச்சேரியின் முடிவு மங்களம். சுப்ரபாதம் மங்களத்தில் நிறைவுபெறும். பஜனையில் அத்தனைபேருக்கும் மங்களம் பாடுவோம். ஏன்... வெண்திரையில், திரைப்படத்தின் முடிவிலும்கூட, சுபம் என்று போடுவார்கள். மங்களம், சுபம், சிவம் அத்தனையும் சிவலிங்கத்தின் நிறைவு. எங்கும் எதிலும் இருப்பது சிவம். அதுதான் சிவலிங்கம். உருவமற்ற பொருள் நமக்காக இறங்கி வந்து சிவலிங்க உருவத்தோடு விளங்குகிறது.

சிவம் என்றால் மங்களம். லிங்கம் என்றால் அடையாளம். மங்கள வடிவம் அது. மங்களம் என்றால் சுபம். சிவத்தை அதாவது சுபத்தை மனதில் இருத்தினால், சித்தம் சிவமாக மாறிவிடும். பிறப்பின் குறிக்கோள் அதுதான். பிறப்பின் முழுமையை சிவத்தின் சிந்தனை தந்துவிடுகிறது. நான் உன்னை வணங்குகிறேன் என்று சித்தத்தில் சிவனை இருத்திவிடு; உனது தேவைகள் அத்தனையும் உன்னை வந்தடையும் என்கிறது உபநிடதம் (தன்னம இத்யுபாசீத நம்யந்தெஸ்மைகாமா:) சிவத்தின் இணைப்பால் அம்பாளுக்கு ஸர்வமங்களா என்ற பெயர் கிடைத்தது. இயற்கை தெய்வன் அவன். பனி படர்ந்த மலையில் அமர்ந்து பனி வடிவாகவும் காட்சியளிப்பான். பாண லிங்கம் இயற்கையில் விளைந்தது. தாருகா வனத்தில்... ஈச்வரரின் அம்சம் பூமியில் விழுந்து லிங்க வடிவமாகக் காட்சியளித்ததாகப் புராணம் கூறும். மார்க்கண்டேயனை சிரஞ்ஜீவியாக்கியதும், கண்ணப்பனை மெய்யப்பனாக்கியதும் சிவலிங்கம்தான். கிடைத்த பொருளை, பிறருக்கு ஆதரவுடன் வாரி வாரி வழங்க, பொருளில் இருக்கும் பற்று படிப்படியாகக் குறைந்து, பற்றற்ற நிலை தோன்றிடும். அதற்குத் தியாகம் என்று பொருள்.
தியாகத்தின் பெருமையைச் சுட்டிக்காட்டுகிறது சிவலிங்கம். பிறக்கும்போது எந்தப் பொருளும் நம்முடன் ஒட்டிக்கொண்டு வருவதில்லை; இறக்கும்போதும் நம்முடன் சேர்ந்து வருவதில்லை. வாழ்நாளில் ஒட்டாத பொருளை ஒட்டிக்கொண்டு கவலைப்படுகிறோம்! பொருளை உன்னோடு ஒட்டிக்கொள்ளாதே. விட்டுவிடு. என்னைப்பார்... என்னில், எந்தப் பொருளும் ஒட்டுவதில்லை என்று சொல்லாமல் சொல்கிறது சிவலிங்கம். வாழ்க்கையின் முழுமை தியாகத்தில் விளையும் என்கிறது உபநிடதம் (த்யாகே நைகெ அமிருதத் தவமானசு:) லிங்கத்தில் எதை அர்ப்பணித்தாலும் ஒட்டிக்கொள்ளாது. அபிஷேகத் தண்ணீர் தங்காது, அணிகலன்கள் அணிய இயலாது; வஸ்திரம் உடுத்த இயலாது. அங்க அடையாளங்கள் தென்படாததால் அவன் உருவமற்றவன் என்பதை உணர்த்தும். சிலைக்கு அதாவது கல்லுக்கு, தட்பவெட்பத்தின் தாக்கம் தெரியாது; அதாவது, அது உணராது. சுக துக்கங்கள் தெரியாது. சொல்லப்போனால் சுகமும் துக்கமும் அதற்கு ஒன்றுதான். பனிப்பொழிவு என்றாலும் சரி, வெயில் கொளுத்தினாலும் சரி... அது அசையாது. சுக-துக்கங்களை சமமாகப் பார்க்கச் சொல்கிறது சிவலிங்கம். கண்ணனும் சுக - துக்கங்களைச் சமமாகப் பார் என்றே சொல்கிறான்.
சிவலிங்கம், மௌனமாக மனிதனுக்கு வழிகாட்டுகிறது. அசையாத சிவலிங்கம், உலகை அசைய வைத்து இயக்குகிறது. அவன் அசையாமலே உலகம் அசையும். உடல். உடலுறுப்புகள், மனம், வாக்கு, செயல்பாடு, அத்தனையும் இன்றி எங்கும் நிறைந்து உலகை இயக்கும் உலகநாதனான பரம்பொருள் நான்தான் என்று அடையாளம் காட்டுகிறது சிவலிங்கம். உடல் உறுப்புகள் இருந்தால்.. அவற்றின் மூலம் ஆசாபாசங்களில் சிக்கித் தவித்து வெளிவர முடியாமல் திண்டாடி கிடைத்த பிறவியை பயனற்றதாக்கும் நிலை ஏற்படும். ஆசைகளை அறுத்தெறிந்தால் நம் உடலுறுப்புகள் சிவத்தோடு இணைந்துவிடும்; பிறவிப் பயன் கிடைக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது சிவலிங்கம். வாயால் உபதேசிக்காமல் செயல்முறையில் விளக்கம் தருகிறது சிவலிங்கம். நடைமுறையில் நிகழ்வின் நிறைவில் மங்களம் பாடுவோம். மங்கள ஆரத்தி எடுப்போம். கச்சேரியின் முடிவு மங்களம். சுப்ரபாதம் மங்களத்தில் நிறைவுபெறும். பஜனையில் அத்தனைபேருக்கும் மங்களம் பாடுவோம். ஏன்... வெண்திரையில், திரைப்படத்தின் முடிவிலும்கூட, சுபம் என்று போடுவார்கள். மங்களம், சுபம், சிவம் அத்தனையும் சிவலிங்கத்தின் நிறைவு. எங்கும் எதிலும் இருப்பது சிவம். அதுதான் சிவலிங்கம். உருவமற்ற பொருள் நமக்காக இறங்கி வந்து சிவலிங்க உருவத்தோடு விளங்குகிறது. 


                                 பகிர்வில் ர.சடகோபால் .BA 

சனி, 23 ஆகஸ்ட், 2014

பெண்கள் அணியும் ஒவ்வொரு ஆபரணத்திற்கும் காரணம் உண்டு

பெண்கள் அணியும் ஒவ்வொரு ஆபரணத்திற்கும் காரணம் உண்டு தெரியுமா?




கோயிலில் உள்ள அம்மனுக்கு என்னதான் பட்டுப்புடவை கட்டி மலர் மாலையெல்லாம் சூட்டினாலும், தாலி, தோடு,மூக்குத்தி, வளையல், ஒட்டியானம், மோதிரம் ஆகிய அணிகலன்கள் அணிவித்தால் தான் அலங்காரம் முழுமையடையும். பெண்களை அம்மனின் அம்சமாக கூறுகின்றனர். எனவே தான் பெண்கள் அணியும் கீழ்கண்ட அணிகலன்களுக்கும் சில காரணங்கள் கூறப்படுகிறது.
1. தாலி - தாயாகி, தாலாட்டுப்பாட கணவன் தரும் பரிசு சின்னம்.
2. தோடு - எதையும் காதோடு போட்டுக் கொள். வெளியில் சொல்லாதே !
3. மூக்குத்தி - மூக்கு தான் முதலில் சமையலை அறியும் உத்தி என்பதை உணர்த்துகிறது.
4. வளையல் - கணவன் உன்னை வளைய, வளைய வர வேண்டும், என்பதற்காக,
5. ஒட்டியாணம் - கணவன், மனைவி இருவரும் ஈருடல் ஓருயிராய் ஒட்டியானோம் என்பதற்காக !
6. மோதிரம் - எதிலும் உன் கைத்திறன் காண்பிக்க.

                                     பகிர்வில் ர.சடகோபால்.BA 

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

வெற்றிலை – சுபிட்சத்தின் அடையாளம்

வெற்றிலை – சுபிட்சத்தின் அடையாளம்

இந்துமதப் பண்டிகைகள், விசேஷம், விரதம், திருமணம் என அனைத்திலும்   முக்கிய   இடம்    வகிப்பது      வெற்றிலை. துப்பிதழ்க்கேற்ற வாசனைத் தாம்பூலங்கள். இப்போது கொண்டு வைத்தேன் ஏற்றுக் கொண்டருள் தாயே என்று மானஸ பூஜையில் வரும் வரிகள் நெகிழச் செய்பவை. வெற்றிலையின் காம்பைக் கிள்ளி நீர் வார்த்து, கற்பூர தாம்பூலம் நிவேதன முடிவில் சமர்ப்பிக்கப்படுகிறது. தேவியின் நிறம் பச்சை; சிவனின் நிறம் வெண்மை ! இரண்டும் சேர்ந்து சிகப்பாகும்போது அதுவே சக்தியின் வடிவம். பச்சை இலையின்றி வெறும் சுண்ணாம்பின் வெண்மையால் பயன் இல்லை. சக்தி இல்லாமல் சிவம் இல்லாதது போல் வெற்றிலையின்றி வழிபாடு இல்லை.

                                                

திருமணம் நிச்சயமாவதை நிச்சயதாம்பூலம் என்கிறார்கள். வெற்றிலை பாக்கு கொடுத்து விட்டால் அது தாம்பூல சத்தியம்.பிறகு அதை யாரும் மீறத்துணியமாட்டார்கள், முற்காலத்தில். சிரார்த்தம் செய்யும்போதும் மற்ற சடங்குகளின் போதும் தானம் கொடுப்பவர்கள் வெற்றிலை பாக்கின் மீது உத்திரணியால் நீர்வார்த்துக் கொடுப்பது வழக்கம். வட இந்தியாவிலும் இந்த வழக்கம்பரவலாக இருக்கிறது. வடநாட்டவர்கள், தீபாவளியன்று லக்ஷ்மிபூஜை செய்யும் போது மூன்று வெற்றிலையையும், மூன்று பாக்கையும் பூசாரி எடுத்து வைப்பார். லக்ஷ்மி, சரஸ்வதி, துர்க்காவை இது குறிக்குமாம். மாங்கல்ய தாரணம் முடிந்ததும் வந்தோரனை வரும் வாழ்த்தி விட்டு விருந்துண்டு விட்டுப் புறப்படுகையில் முகூர்த்த வெற்றிலைபாக்கு கொடுக்காமல் அனுப்ப மாட்டார்கள். திருமணத்தின்போது கணவன் மனைவி இருவருக்கும் பெண் ணின் சகோதரன் தாம்பூலம் மடித்துக் கொடுப்பது ஒரு சம்பிரதாயம். நலங்கின்போதும், முதல் இரவின் போதும் வெற்றிலை பாக்குக்கு முக்கிய இடம் உண்டு.

கம்பராமாயணத்தில் ஒரு உருக்கமானகட்டம். ராவணனால் சிறை எடுக்கப்பட்ட சீதை. இளம் வெற்றிலையை யார் மடித்து வாயில் போட, ராமன் உண்பான் என்று வருந்தினாளாம்.

மகாபாரதத்தில் தருமன் ராஜசூய யாகம் நடத்திய போது முதல் தாம் பூலத்தை கண்ணன் பெற்றுக் கொண்டான் என்று சொல்கிறது. திவ்ய பிரபந்தத்தில் உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் எம் பெருமான் என்றென்றேகண்களில் நீர் மல்கி என்று மனம் உருகிப் பாடுகிறார் நம்மாழ்வார்.காளமேகப்புலவர் ஆதி நாளில் திருவானைக்காகோயிலில் பரிசாரகராக இருந்தாராம். அங்கே தாசியாக இருந்த மோகனாங்கி என்பவளின் அழகில் மயங்கி, ஒருநாள், கோயில் பிரகாரத்திலேயே அவள் வருகைக்காக காத்திருந்த நிலையில் கண்ணயர்ந்தார். நள்ளிரவில் அகிலாண்ட நாயகி அம்மன் அவர்முன் தோன்றி, தன் வாயில் இருந்த தாம்பூலத்தை அவர் வாயில் உமிழ்ந் தாளாம், அவர் அதைச் சுவைக்க, தெய்வப் பிரசாதமான தாம்பூலம் நாவில் பட்டதும் நாவன்மை பெற்ற காள மேகம், ஆசு கவி பாடுவதில் வல்லவரானாராம். இதுபோன்றே, கூத்தனூரில் தேவி சரஸ்வதி தன் வாய்த்தாம் பூலத்தின்சாறை அளித்து ஒட்டக் கூத்தரை கவி வித்தகர் ஆக்கிய தாகவும் ஒரு வரலாறு உண்டு. வெற்றிலையை வாடவிடுவது வீட்டுக்கு சுபமல்ல என்பது நம்பிக்கை. வெற்றிலை பாக்கை எப்போதும் வலது கை யால் தான் வாங்க வேண்டும். மகிமை மிக்கதும், மங்கள கரமானது மான வெற்றிலை, சுபிட்சத்தின் அடையாளமாகவே கருதப்படு கிறது.

                                          பகிர்வில் ர.சடகோபால் .BA                   

திங்கள், 18 ஆகஸ்ட், 2014

வாழ்கையின் பொருள்

வாழ்கையின்  பொருள் 
                                               வாழ்கைக்கு தேவையான மூன்று பொருள்  

            1. கல்வி  2. பொருள் , காமம் .  3. தர்மம் 

                                   

கல்வி :
                 கல்வி என்பது  ஒருவனுக்கு குழந்தை பருவத்தில் இருக்க வேண்டும் .
கல்வி கற்கும் போது பிரமசரியத்தை கடை பிடிக்க வேண்டும் .

பொருள்,காமம் :
                 அதன் பிறகு  இளமை பருவத்தில் பொருள் , காமம் , இதை உணர வேண்டும் .  

பொருள்:
                 பொருள் என்றால்  நண்பர்கள், பூமி , வாகனம் , வீடு , மக்கள் , போன்ற பொருள்களை பெற வேண்டும் .

காமம்  :
                  காமம் என்பது ஒரு பெண்ணை  மட்டுமே மனதால் நினைத்து  கண்களால் ரசித்து , தன் சுவாசத்தால் நுகர்ந்து தன்  இதயத்தால் உணர்ந்து இரு உடல்களையும் அன்பால் பரிமாறி கொள்வதே காமம்.

தர்மம்  : 
                 அதன் பிறகு முதிர்வு பருவத்தில்  தர்மம் செய்து தன்னுடைய மோட்சத்தை  தேடி கொள்ள வேண்டும் .

இதுவே ஒரு மனித வாழ்கையின் மூன்று முக்கிய அம்சமாகும் .

ஆனால் இதில் கட்டுபாடுகள் அவசியம் என்பதை உணர  வேண்டும்.

 

                                பகிர்வில் ர.சடகோபால் .BA 
 

ஸ்ரீ சொர்ண யட்சணி மஹா மந்திரம்

ஸ்ரீ சொர்ண யட்சணி மஹா மந்திரம் 

 மூல மந்திரம்:
                                " ஓம் ஸ்ரீம் க்லீம் சொர்ண ஆகர்சணி சௌம் க்லீம் ஓம் 
சொர்ண யட்சணி யஷ குல நாயகி மமவசம் குருகுரு சுவாகா "

நிவேதனம்      : 
                                   பால் , பழம் , சுண்டல் , தேங்காய் ,வடை , பால் பாயசம் ,
 வெற்றிலை பாக்கு , வைத்து தீபதூபம் காட்டி செபிக்க.
 
பிரயோகம்     : 
                                  மனதை ஒரு நிலை படுத்தி 1008 உரு வீதம் ஒன்பது நாட்கள்  செபிக்க ஸ்ரீ சொர்ண யட்சணி தேவி  குழந்தை வடிவில் 
தரிசனம் தரும். உடனே தூபம் காட்டி வணங்கி கொள்ள வேண்டும் .

பலன்                 :
                                முக்காலமும்  நம் காதில் கூறும் , மறைமுகமாக 
தனம் கொடுக்கும்  அதை அன்று முழுவதும் செலவு செய்ய வேண்டும் . 
மது ,மங்கை ,சூது , என் செலவு செய்தால்  கொடிய துன்பத்திற்கு ஆளாக நேரிடும்.  மற்றும் இந்த தேவதையால் வாக்கு  பலிதம்  உண்டாகும் . இன்னும் பல அற்புதமான செயல்கள் செய்யும் .

   குறிப்பு     
                                      எந்த ஒரு தெய்வ தேவதைகளும் அதற்குரிய யந்திரம் ,மை  மூலிகை  இருந்தால் மட்டுமே சித்தி பெற முடியும் . என்பதை கவனம் கொள்ள வேண்டும் .........

                              பகிர்வில் ர.சடகோபால் 

சிவவாக்கியம்

சிவவாக்கியர் - சிவவாக்கியம் ​- கடவுள் 
  

                                               


கடவுள் இருக்கின்றானா

சித்தம் என்றால் உயிர் சித்தர்கள் என்றால் உயிரை உணர்ந்தவர்கள் என்று பொருள்.

சித்தர்கள் தனது தவத்தின் மூலம் கடவுள் நிலை உணர்ந்தார்கள். கடவுள் நிலை உணர்ந்த சித்தர்கள் கடவுளைப் பற்றி சாதாரண மனிதர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடனே  பல்வேறு பாடல்களை இயற்றியுள்ளனர்.

அந்த பாடல்கள் ஆன்மீகப் பயிற்சியில் ஈடுபட்டு ஆன்மா வளர்ச்சி அடைந்த மனிதர்களின் பல்வேறு நிலைகளுக்கு ஏற்ப புரியும் விதத்தில் அமைந்திருப்பது தான் அந்த பாடல்களின் சிறப்பாகும்.

மேலும் சித்தர்கள் தங்கள் பாடல்களில் கடவுளைப் பற்றியும், கடவுளை அடையும் வழிகளைப் பற்றியும் , மருத்துவம் , சோதிடம் என்று பல்வேறு வாழ்வியல் நெறிமுறைகளைப் பற்றியும், இந்தச் சமுதாயம் பயன் பெறும் வகையில் குறியீடுகளாக அமைத்திருக்கின்றனர். 

ஆத்தகைய சிறப்பு வாய்ந்த பாடல்களை பல்வேறு சித்தர்கள் பல்வேறு நிலைகளில் இந்த உலகம் பயன்பெறும் வகையில் பாடியுள்ளனர்.

அதில் சிவவாக்கியர் பாடல்கள் சிலவற்றை இங்கே நினைவு கூர்வோம்.


கடவுள் உள்ளே இருக்கிறான் :

கடவுளைத் தேடி அலைந்து கொண்டிருப்பவர்களைப் பற்றி சிவவாக்கியர் கீழ்க்கண்ட பாடலைக் குறிப்பிடுகிறார்.


               ””””ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை
                      நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்
                      வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்காள்
                      கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே”” 
                                                                         -----------சிவவாக்கியர்-----

நமது உடலில் சோதி வடிவமாக உள்ள இறைவனை நமது உடலில் எந்த இடத்தில் இருக்கிறான் என்று தெரியாமல் அவனை அடையக் கூடிய வழி புரியாமல் பிராணாயாமம் போன்ற மூச்சுப் பயிற்சிகளை செய்து நமது பிராணனை ஓட விட்டு சோதி வடிவமாக உள்ள இறைவனை அடைய முடியாமல் நாட்களை கழித்து மனம் வாடி இறந்து போன மனிதர்கள் எண்ணிக்கையில் அடக்க முடியாத கோடி என்கிறார் சிவவாக்கியார் .

நமது உடலில் கடவுள் இருக்கிறான் என்று தெரிந்தும் அதை அடைய முடியாமல் இறந்தவர்களே கோடி கணக்கில் என்றால் கடவுளை வெளியே தேடி அலைந்து கொண்டிருப்பவர்களை எண்ணிக்கையில் கூற முடியாது என்று சிவவாக்கியர் மனம் வருந்தி பாடுகிறார் .



கடவுள் வெளியே இருக்கிறான்:

கடவுள் உள்ளே இருக்கிறான் என்று தெரிந்தும் அதை அடைய முடியாமல் இறந்தவர்களைப் பற்றி பாடிய சிவவாக்கியர் கடவுளை வெளியே தேடி அலையும் மனிதர்களைப் பற்றி மிகவும் கோபாவேசமாகப் பாடுகிறார்.



                    ””””நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுட்பஞ் சாற்றியே
                          சுற்றிவந்து முணமுணென்று சொல்லுமந்திர மேதடா
                          நட்டகல்லும் பேசுமோ நாதனுள்ளி ருக்கையில்
                          சுட்டசட்டி சட்டுவங் கறிச்சுவைய றியுமோ”” 
                                                              ---------சிவவாக்கியர்--------



ஒரு கல்லை நட்டு அதை தெய்வம் என்று சொல்லிக் கொண்டு பூக்களை அதற்கு சூட்டி அந்த கல்லை சுற்றி சுற்றி வந்து தான் நினைத்த காரியம் நிறைவேறுவதற்காக அந்த கல்லை எந்த தெய்வம் என்று நினைக்கிறார்களோ ,

அந்த தெய்வத்திற்குரிய மந்திரங்களை உச்சாடணம் செய்து தனது காரியத்தை நிறைவேற்றச் சொன்னால் நட்ட அந்த கல்லுக்குள் இருக்கும் கடவுள் உன் கோரிக்கையை நிறைவேற்றுகிறேன் என்று சொல்லுமா என்கிறார.



மேலும் சாப்பிடுவதற்காக சட்டியில் காய்கறிகளைப் போட்டு செய்யும் குழம்பு ,ரசம் ,பொறியல் போன்றவற்றின் சுவையை சமைப்பதற்கு பயன்படுத்தப் படும் சட்டி எப்படி அறியாதோ 

அதைப் போலவே தெய்வம் என்று நம்பி நட்ட கல்லும் நம்முடைய உணர்வுகளை உணர்ந்து கொள்ள முடியாது என்கிறார்.


கடவுள் நம் உள்ளே இருக்கிறான் என்று உணராமல் கடவுளை வெளியே தேடிக் கொண்டு அலையும் மனிதர்களின் முட்டாள்தனமான முறைகளின் மூலம் கடவுளை வணங்குகிறவர்களின் செய்கைகளைத் தான் சிவவாக்கியர் கண்டிக்கிறாரே தவிர ,

கடவுள் இல்லையென்று நாத்திகவாதி போல் நாத்திகம் பேசவில்லை.

இனிமேலாவது சிவவாக்கியரை நாத்திகர் என்று பேசுவதை தயவு செய்து தவிர்ப்போம்.



மறுபிறப்பு


”””கறந்தபால் முலைப்புகா கடைந்தவெண்ணெய் மோர்புகா
                  உடைந்துபோன சங்கினோசை உயிர்களும் உடற்புகா
                  விரிந்தபூ வுதிர்ந்தகாயு மீண்டுபோய் மரம்புகா
                  இறந்தவர் பிறப்பதில்லை யில்லையில்லை இல்லையே”” 
                                                                        ----------சிவவாக்கியர்-----


கறந்தபால் முலைப்புகா:
பசுவின் மடியிலிருந்து கறக்கப்பட்ட பாலை மீண்டும் அதன் மடியில் கொண்டு சேர்க்க முடியாது , அதாவது முலையிலிருந்து கறக்கப்பட்ட பால் என்று சொல்லும்போது உலகில் வாழும் பெண் உயிரிகளின் முலையிலிருந்து கறக்கப்பட்ட பாலை மீண்டும் அதன் முலை வழியாக அதன் உடலுக்கு உள்ளே செலுத்த முடியாது என்று பொருள்.




கடைந்தவெண்ணெய் மோர்புகா:
மோரை நன்றாக கடைந்தால் அதிலிருந்து வெண்ணெய் தனியாக பிரியும் .

தனியாக பிரித்து எடுக்கப்பட்ட வெண்ணெயை மீண்டும் மோரினுள் செலுத்தி அதை பழையபடி மோராக மாற்ற முடியாது.



உடைந்துபோன சங்கினோசை (உயிர்களும்) உடற்புகா:
உடைந்து போன சங்கின் ஓசை என்றால் சங்கிலிருந்து தனியாக பிரிந்த ஓசை என்று பொருள்.

சங்கை ஊதும் போது அதில் இருந்து ஓசை எழுப்பப் படுகிறது. எழுப்பப்பட்ட ஓசையானது காற்றில் கலந்து விடுகிறது.
அவ்வாறு காற்றில் கலந்த ஓசையை தனியாக பிரித்து மீண்டும் அந்த சங்கினுள் கொண்டு சென்று அடைக்க முடியாது.




விரிந்தபூ யுதிர்ந்தகாயு மீண்டுபோய் மரம்புகா:
மரத்திலிருந்து தனியாக பிரிந்து கீழே விழுந்த பூவும் மரத்திலிருந்து தனியாக பிரிந்து கீழே விழுந்த காயும் மீண்டும் போய் மரத்தில் இணையாது இணையவும் முடியாது.

பூவிரிந்தால் அதாவது மலர்ந்தால் மீண்டும் அது மொட்டாக முடியாது என்று சிலர் அதற்கு அர்த்தம் சொல்கிறார்கள் .

இந்த பாடலில் உள்ள கருத்துக்களை ஊன்றி கவனித்தால் ஒன்று மற்றொன்றாக ஆவதைப் பற்றி சொல்லவில்லை . ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிவதைத்தான் சொல்கிறார்கள்.

எனவே மரத்திலிருந்து பூ உதிர்ந்து கீழே விழுவதையும் , மரத்திலிருந்து காய் உதிர்ந்து கீழே விழுவதையும் , உற்று நோக்கினால் ஒன்றிலிருந்து ஒன்று பிரிவதைத் தௌ்ளத் தெளிவாக உணரலாம்.




இறந்தவர் பிறப்பதில்லை யில்லையில்லை யில்லையே:
பூர்வ ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப இந்த ஜென்மம் ஏற்படுகிறது. இந்த ஜென்மத்தில் கர்ம வினைகள் அனைத்தையும் கழித்து விட்டால் முக்தி ஏற்படும் இல்லையென்றால் செய்த கர்மவினைகளுக்கு ஏற்ப மறு ஜென்மம் ஏற்படுகிறது.

இங்கே ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் பிறவி என்பது வேறு. ஜென்மம் என்பது வேறு. பிறவியைப் பற்றி பிறகு தெரிந்து கொள்ளலாம். இபபொழுது ஜென்மத்திற்குள் செல்லலாம்.

ஒரு ஆன்மாவுக்கு 7 ஜென்மம் 7 ஜென்மத்திற்குள் அந்த ஆன்மாவானது தனது கர்ம வினையை கழிக்கா விட்டால் 7x7= 49 ஜென்மம். 49 ஜென்மத்திற்குள்ளும் தனது கர்ம வினையை கழிக்காவிட்டாலும் அந்த ஆன்மாவானது  தானாகவே தனது பயணத்தை முடிக்க சுத்த வெளியில் கலந்து விடும்.

அதனால் தான் நாம் அடிக்கடி ஏழேழு ஜென்மம் என்று சொல்வதற்கு காரணம்.

இந்த ஜென்மத்தில் நாம் நம் கர்ம வினைகள் அனைத்தையும் கழித்து விட்டால் முக்தி கிடைக்கும். முக்தி கிடைத்து விட்டால் நமக்கு மறு பிறப்பு கிடையாது. 

யாருக்கு பிறப்பு கிடையாதோ அவருக்கு இறப்பு கிடையாது. பிறப்பு இறப்பு அற்ற நிலை எப்படி கடவுளுக்கு உண்டோ அப்படியே நமக்கும்.


””””தத்வமவே த்வமேவதத்””  அதாவது நீயே அது அதுவே நீ என்ற நிலை உருவாகி விட்டால் பிறப்பு இறப்பு கிடையாது. பிறவிச் சுழல் கிடையாது மறுஜென்மம்  என்பது கிடையாது.

உடலிலிருந்து உயிர் பிரிந்து விட்டால் உயிரின் கர்ம வினை கழிந்து விட்டால் மறு பிறப்பு கிடையாது. உயிரின் கர்ம வினை கழியா விட்டால் மறு பிறப்பு உண்டு.

இங்கே இந்த பாடலில் உயிர்களும் உடற்புகா என்றால் தனது கர்ம வினையை கழித்து விட்டு முக்தி அடைந்த ஆன்மாவானது பிறப்பு எடுக்க மீண்டும் ஒரு உடலைத் தேடிச் சென்று இணையாது என்று பொருள்.

இறந்தவர் என்றால் கர்ம வினையை கழித்து விட்ட ஆன்மா.
இறந்தவர் பிறப்பதில்லை என்றால் கர்ம வினையை கழித்து விட்டு முக்தி அடைந்த ஆன்மா பிறப்பதில்லை என்று பொருள்.

இந்த பாடலின் மூலம் சிவவாக்கியார் என்ன சொல்ல வருகிறார் என்றால்

பரிணாம வளர்ச்சியில் ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து விட்டால் மீண்டும் அது பழைய நிலைக்கு திரும்பாது , இணையாது குரங்கிலிருந்து மனிதன் பிரிந்து வந்து விட்ட பிறகு குரங்கு குரங்காக இருக்கிறது . மனிதன் மனிதன் மனிதனாக இருக்கிறான் . இரண்டு வேறு பட்ட நிலை உருவாகி விட்டது.


அதைப் போல

உடலிலிருந்து பால் பிரிந்து விட்டால் பால் வேறு உடல் வேறு.

மோரிலிருந்து வெண்ணெய் பிரிந்து விட்டால் மோர் வேறு வெண்ணெய் வேறு.

சங்கிலிருந்து ஓசை பிரிந்து விட்டால் சங்கு வேறு ஓசை வேறு.

மரத்திலிருந்து பூ பிரிந்து விட்டால் மரம் வேறு பூ வேறு.

மரத்திலிருந்து காய் பிரிந்து விட்டால் மரம் வேறு காய் வேறு.

அதைப்போல பல்வேறு ஜென்மங்களாக உடலோடு ஒட்டி வந்த உயிரானது கர்ம வினைகளை தீர்த்து முக்தி அடைந்து விட்டால் உயிரானது வேறு உடலைச் சென்று சேராது மறுபிறப்பு எடுக்காது.

உடல் வேறு உயிர் வேறு என்று ஆகிவிடும்”” என்று சொல்கிறார்.


இறந்தவர் பிறப்பதில்லை என்பதன் மூலம் சிவவாக்கியர் மறு பிறப்பு இல்லை என்று சொல்ல வரவில்லை.

எந்த உயிருக்கு மறு பிறப்பு உண்டு எந்த உயிருக்கு மறுபிறப்பு இல்லை என்று தான் சொல்ல வருகிறார்.

                                            பகிர்வில் ர.சடகோபால் .BA 

பஞ்சாட்சரம்

பஞ்சாட்சரம் மூன்று விதம்

                                      
           

மூன்று  வித பஞ்சாட்சரம்

                                    ஸ்தூல பஞ்சாட்சரம் - நமசிவய

                                    சூட்சும பஞ்சாட்சரம் - சிவயநம

                                    காரணபஞ்சாட்சரம் - சிவ சிவ 

                       ஸ்தூல பஞ்சாட்சரம் - நமசிவய

நமசிவய” என்னும் ஸ்தூல பஞ்சாட்சரம் ஓம்கார பிரணவத்தோடு சேர்த்து “ஓம் நமசிவய” என்று உச்சரிப்பதே மரபாகும். சித்தர்கள் இம் மந்திரத்தை பஞ்சபூதங்களின் ஒருமித்த வெளிப்பாடகவே உணர்ந்தனர். இம் மந்திரத்தில் சித்தி அடைவதால் பஞ்சபூதங்கள் கட்டுப்படுவதொடு ஐம்பொறிகளும் நமது கட்டுக்குள் அடங்கி நிற்கும். பஞ்சபூதங்களில் இம் மந்திரத்தின் ஆளும் தன்மை

                                 ந – நிலத்தைக் குறிக்கிறது,
                                 ம – நீரைக் குறிக்கிறது,
                                 சி – நெருப்பைக் குறிக்கிறது,
                                 வ – காற்றைக் குறிக்கிறது,
                                 ய – ஆகாயத்தைக் குறிக்கிறது


ந - கிழக்கு நோக்கிய முகத்திற்கு உரியது, மஞ்சள் நிறம், கௌதம மகரிஷி

ம – தெற்க்கு நோக்கிய முகத்திற்கு உரியது, கருப்பு நிறம், அத்திரி மகரிஷி

சி – மேற்க்கு நோக்கிய முகத்திற்கு உரியது, புகையின் நிறம், விஸ்வாமித்ர மகரிஷி

வ – வடக்கு நோக்கிய முகத்திற்கு உரியது, பொன்னிறம், ஆங்கீரஸ மகரிஷி

 ய –மேல் நோக்கிய திருமுகத்திற்கு உரியது, சிவந்த நிறம், பரத்வாஜ மகரிஷி 


                               சூட்சும பஞ்சாட்சரம்

சிவய நம” என்பது சூட்சும பஞ்சாட்சரம் ஆகும். இம் மந்திரம் பிரணவத்தோடு சேர்த்து “ஓம் சிவய நம” என்றே உச்சரிக்க வேண்டும். சிவபெருமானின் ஐந்து முகங்களில் இருந்து ஓம் எனும் பிரணவம் உதித்தது. வாமதேவம் வடக்கு முகத்திலிருந்து ‘அ’ காரமும், சத்யோஜாதம் மேற்க்கு முகத்திலிருந்து ‘உ’ காரமும், அகோரம் தெற்கு முகத்திலிருந்து ‘ம’ காரமும், தத்புருஷம் கிழக்கு முகத்திலிருந்து ‘பிந்து’ எனப்படும் நாதத்தின் தொடக்கமும், ஈசானம் மேல் நோக்கிய முகத்திலிருந்து நாதமான சப்த ரூபமும் தோன்றின. இவ்வாறு ஓம் என்ற பிரணவத்தோடு சிவய நம சேர்ந்து முழுமையான மந்திரஸ்வரூபம் உருவானது.

அவ்வும், உவ்வும், மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே”

“சிவய நம என்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒரு நாளுமில்லையே”

திருவாய் பொலியச் சிவய நம என்று நீறணிந்தேன்தருவாய் சிவகதி நீ பாதிரிப் புலியூர் அரனே”

“சித்தம் ஒருங்கிச் சிவய நம என்று இருக்கினல்லால்
அத்தன் அருள் பெறலாமோ அறிவிலாப் பேதை நெஞ்சே...”

                           காரண பஞ்சாட்சரம்

 சிவ சிவ என்பது காரணப் பஞ்சாட்சரம் என வழங்கப்படும்.சிவ சிவ எனும் மந்திரம் நமது காரண சாரத்தில் உள்ள பிறப் பதிவுகளை நீக்க வல்லது என்பது ஞானியாரின் அழ்ந்த கருத்து. இந்த மந்திரத்தில் சாதாரண உலகின் ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்ட, ஞான நிலைக்கு ஒருவரை இட்டு செல்லக்கூடியது. ஆகையால் இந்த மந்திரத்தின் மூலமாக லவ்கீக லாபங்களை எதிர் பார்க்க முடியாது. அதாவது உலகியல் குறிகோள்களை பூர்த்தி செய்த ஒருவருக்கு (துறவு நெறி பூண்டவர்களும், மிக வயதானவர்களும்) இந்த மந்திரம் பொருத்தமானது.

             “சிவ சிவ என்றிடத் தீவினை மாலும்
              சிவ சிவ என்கிலார் தீவினையாளர்
              சிவ சிவ என்றிடத் தேவருமாவர்
             சிவ சிவ என்னச் சிவ கதி தானே”


                                              பகிர்வில் ர.சடகோபால் .BA