வியாழன், 6 நவம்பர், 2014

தெய்வ ஆகர்ஷணம்

ஆகர்ஷணம் என்பது அழைப்பது என்பதாகும் 

சுருதியாய் சிறுமுன்னை வேரை வாங்கச் 
 சுரோணிதஞ்சேர் குக்குடமே பலிகொடுத்துச் 
சோமனுட கிரகணத்தில் தியனாங்கேளே 
 கேள் சர்வ ஆக்ரூசணி சுவாகா வென்று 
கிரக்கிச்சு நிழலுலர்த்தித் தூளாயாட்டி 
 வேளப்பா வெள்ளெருக்கம் பஞ்சில்வைத்து 
விளக்கேற்றி வைத்திருக்க பார்த்த தெய்வம் 
 வாளுயர்ந்த வாகனமும் ஏறிக்கொண்டு 
வந்து நிற்கும் உன்முன்னே மைந்தாபாரு
 சூழவே யார்வந்து பார்த்தலுந்தான் 
தோற்றுமடா அவரவர்கள் முன்னேதானே 
                                                                              - கருவூரார் 

பொருள்:
                       சிறுமுன்னை செடிக்கு சந்திர கிரகணத்தில் கோழி பலி கொடுத்து    "சர்வ ஆக்ருஷ்ணி சுவாகா" என்று மந்திரம் சொல்லி வேரை எடுத்து நிழலிளுலர்த்தித் தூள் செய்து, வெள்ளெருக்கம் பஞ்சில் வைத்துத் திரி செய்து விளக்கேற்றி பார்க்க, நினைத்த தெய்வம் தனது வாகனத்துடன் கண்ணுக்கு தோன்றும்,வேறு நபர் பார்த்தாலும் அவ்வாறு காட்சி தெரியும் 

              பகிர்வில் ர.சடகோபால்.BA