வியாழன், 23 அக்டோபர், 2014

விஷ்ணு கிரந்தி


திறமாக முறையின்ன சொல்லக் கேளு 
 திருமால் தன் மூலியிலே மூலம் வாங்கித் 
திறமாக ஓடுகின்ற செலத்தில் நின்று 
 தேவிதனை  நினைத்துக் கொண்டு வேருரைத்துத் 
திறமாக கொண்டு போய் கண்ணும் நெற்றி 
  சேந்தக்கரம் புறமுகம் தேய்த்துக்கொண்டு 
திறமாக பார்த்திடவே விஷ்ணுலோகச் 
  சேதியெல்லாம் வகைவகையாய் செப்புவாரே 
                                                                                 -கருவூரார் பலத்திரட்டு 

பொருள்:
                  விஷ்ணு கிரந்தியின் வேரை எடுத்து ஓடுகின்ற தண்ணீரில் நின்று அஞ்சனா தேவியை நினைத்து விஷ்ணுகிரந்தியின் வேரை  உரைத்து, கண்,நெற்றி,கைகள்,முகம் முதலியவற்றில் தேய்த்து கொண்டு பார்க்க விஷ்ணுலோக செய்திகளை அங்கு நடப்பவைகளை எல்லாம் தெளிவாக காணலாகும்.

                   பகிர்வில் ர.சடகோபால்.BA  

தற்புருட முகம்


பார்த்திட்ட தற்புருசம் இருபத் தஞ்சும்
 பாடுகிறேன் நமசிவ அகோரமாகும் 
சேர்த்துயிது சேவிக்க உச்சாடனமாகும் 
 சிவமான சௌமியத்தை சேவிக்கேளு 
காத்திட்ட அங்சிவாய  நமா வென்றால் 
 காதலித்த புத்திரரைக் கொடுக்குங்காணும்
ஏத்திடவும் அங் உங் வங் சிவாயா நமா வென்றால் 
  இயல்பான தேகத்தில் நோய்கள் தீருங்காணே 
                                                                                                -கருவூரார் பலத்திரட்டு 

பொருள்:
                    "நமசிவ"  என்ற அகோர மந்திரத்தை தொடர்ந்து சொல்லி கொண்டு வர உச்சாடனமாகும்.
                    
                    "அங் சிவாய நமா"  என்று மந்திரம் சொல்லி கொண்டுவர  வேண்டியபடி குழந்தை பாக்கியம் உண்டாகும் .

                    "அங் உங் வங் சிவாய நமா" என்று மந்திரம் சொல்லிக்கொண்டு வர உடலில் உள்ள நோய்கள் குணமாகும்.     


                            பகிர்வில் ர. சடகோபால்.BA