புதன், 24 செப்டம்பர், 2014

மதமத்தை வேர் வசியம்

மதமத்தை (பொன்னூமத்தை வேர்)

வசிகரமாம் மதமத்தை மூலம் வாங்க 
     மந்திரத்தை கேள் சொல்வோம் மைந்தாநீதான் 
வசிகரஞ்சேர் கீறிணி வருணியாரே
     மதர்னாமீ சீவி வசியம் பவ்வே 
வசிகரங்க்கான் சாக்காயுப் பருவம் நோக்க 
     வந்து நிற்கும் பருவமதில் சமூலம் வாங்கி 
வசீகரமாய் நிழலுலர்த்தி தைலம் வாங்கி 
     மைந்தனே குப்பிலே அடைத்திட்டாயே
அடைத்ததற்கு வகைகேளு பணந்தான் வாங்கி 
      அதிற்பாதி கற்பூரம் போட்டு தேய்த்து 
படையடைத்து புருவமத்தி திலந்தீட்டு 
      போதுவாறே நினைத்த பெண்கள் வந்து சேரும் 
                                                                                                      -கருவூரார் 

பொருள்:
            மதமத்தை மூலிகையை எடுப்பதற்கு "கீறிணி வருணீ மதர் நாமீ சீவீ 
வசியம் பவ்வே "

 என்று மந்திரம் ஜெபித்து மதமத்தை காயாக இருக்கும் பருவத்தில் மூலமாக எடுத்து நிழலில் உலர்த்தி குழித்தைலம் எடுத்து குப்பியில் அடைத்துகொள் . மேற்படி மதமத்தை தைலத்தை பணவெடை எடுத்து அரை பணவெடை பச்சை கற்பூரம் சேர்த்து கலந்து புருவ மத்தியில் போட்டிட்டு கொண்டு எந்த பெண்ணை நினைத்தாலும் அவள் வசியமாகி உன்னிடத்தில் வந்து சேர்வாள் .

                             பகிர்வில் ர.சடகோபால்.BA 

ஆக்ருஷ்ணம்


ஆக்ருஷ்ணம் என்பது அஷ்டகர்மங்களின் ஏழாவது கர்மமாகும் .

தொட்டல்சுருங்கி வேர்                சிறியாநங்கை வேர் 
 தலை சுருளி வேர்                          சிறுமுன்னை வேர் 
நாகமல்லி வேர்                                சந்தன வேர் 
கொழிஞ்சி வேர்                                 சுகறை வேர் 

இவைகளை முறைப்படி காப்பு கட்டி சாப நிவர்த்தி செய்து , ஆணிவேர் ஆறாமல் வெட்டி எடுத்து , உலர்த்தி தீயில் கறுக்கி கொண்டு , பச்சை தவளை எடுத்து வந்து குடலை நீக்கி குழி தைலம் எடுத்து கொள்ளவும் . பின்பு குங்குமபூ ,கோரோசனம் ,பச்சைகற்பூரம் ,புனுகு,கஸ்துரி , இவைகளை வகைக்கு ஒரு குன்றிமணி எடை சேர்த்து கல்வத்திலிட்டு, பச்சை தவளை நெய் விட்டு இரண்டு ஜாமம் அரைத்து கொம்பு சிமிழில் பதனம் பண்ணவும் .

இதற்க்கு பூஜை மந்திரம் :
                                                   ஓம் நமோ பகவதி சர்வ ஆதார சக்தி க்லீம்  ஹ்ரீம் 
ஸ்ரீம் ஓம் ஆக்ருஷ்ண தூளி ஸர்வம் ஆக்ருஷ்ய ஆக்ருஷ்ய ஹீம் க்லீம் பட் ஸ்வாக "  

 இந்த மந்திரத்தை தினம் 1008 உரு வீதம் 21 நாட்கள் ஜெபம் செய்ய மை உயிர் பெறும்.

 இதை வைத்து எல்லா விதமான ஆக்ர்ஷ்ணங்களும் செய்யலாம் .
(ஆக்ருஷ்ணம் என்பது அழைப்பு )

                                        பகிர்வில் ர.சடகோபால்.BA


பாதாளஅஞ்சனம்


குப்பைமேனி வேர், வெள்ளைச்சாரணைவேர்

   வெள்ளெருக்கன்வேர், வெள்ளைக்காக்கணம் வேர்

     வெள்ளைவிஷ்ணுகாந்திவேர்


      இவை ஐந்தையும் முறைப்படி காப்பு கட்டி சாபம் போக்கி ஆணிவேர் அறாமல் பிடுங்கி உலர்த்தி தீயில் கறுக்கி எடுத்து வைத்துக்கொண்டு ஒரு கோட்டானை பிடித்து உரோமம், குடல் போக்கி குழித்தைலம் எடுத்து மேற்கண்ட வேரை கல்வத்திலிட்டு இரண்டு சாமம் கோட்டான் தைலம் விட்டு அரைக்க வேண்டும். அதன்பின் புனுகு, கோரோசனை, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, குங்குமப்பூ இவைகளை வகைக்கு குன்றிமணி அளவு சேர்த்து ஒரு சாமம் அரைத்தால் மை பக்குவம் அடையும். மை பக்குவம் ஆனதின் அடையாளம் தெரிய கல்வத்தின் அடியில் ஒரு ரூபாயை போட்டு அரைத்தால் அது மையில் தெரியும்.
                                                              
                                                
இதற்கு பூஜை மந்திரம்
  
ஓம் ஹ்ரிம் ஐம் மதன மேகலே மமகார்யம் ஸாதய ஸாதய ஸ்வாஹா.

இந்த மந்திரத்தை நாளொன்றுக்கு 1008 உரு வீதம் பனிரெண்டு நாள் செபித்தால் மை உயிர் பெறும்.அதன் பின் தான் உபயோகத்திற்கு ஆகும்.

நிவேதனம் செவ்வலரி புஷ்பம், சந்தனம், பன்னீர், பால், பழம், இளநீர், தேங்காய், பத்தி, சூடம், தயிர், பொங்கல் ஆகியவைகளை வைத்து தூபதீபம் காட்டி மையை பத்திரம் செய்யவும்.


 இதன் பிரயோகம்

இந்த மையை கொஞ்சம் எடுத்து வெற்றிலை ஒன்றில் தடவி விளக்கின் ஒளியில் பார்த்தால் பூமிக்குள் இருக்கும் பொருள்கள் யாவும் தெரியும். நவரத்தினம், தங்கம், வெள்ளி முதலிய உலோகங்கள் இருப்பதைக் காணலாம்.தண்ணீர், ஊற்று, தண்ணீருக்குள் இருக்கும் பொருள், மண்ணில் புதைந்துள்ள புதையல் முதலியனயாவும் தெரியும்.இது பாதாள அஞ்சனம் என்பதால் வேறு உபயோகத்திற்கு பயன்படாது என்று மலையாள மாந்திரீகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

                         பகிர்வில் ர.சடகோபால்.BA 

சித்தர் தரிசன மார்க்கம்


நம்மில் பலரும் சித்தர்களின் மந்திரங்களையும், 
ஜாலவித்தைகளையும், வைத்தியங்களை அவர்களின் 
நூல்களின் மூலமே அறிந்து கொள்ள முடிகிறது.
அவற்றுள் பலவும் பரிபாசைகளாகவே இருப்பதால் அவற்றை 
பொருள் கொள்ளுதல் இயலாத காரியமாகிறது.
அப்படி சித்தர்களின் வழியை தேடி செல்வோர்க்காக 
சித்தர் தரிசன மார்க்கம் என்ற இவ்விடுக்கையில்
 உங்களுக்கு சித்தர்களின் தரிசனத்தை காட்டும் 
மந்திரத்தை வெளியிடுகின்றோம்.

                 


 சித்தர் தரிசன மந்திரம்:

                                         ஓம் சிங் ரங் அங் சிங்.............. மசி வசி

இம்மந்திரத்தில் நீங்கள் எந்த சித்தரை தரிசிக்க 
எண்ணுகிறீகளோ அவரின் பெயரை இடைவெளி 
விட்ட இடத்தில் நிரப்பி செபிக்கவும்.
இம்மந்திரத்தை உடல்,மனசுத்தியுடன் அதிகாலை 
நேரத்தில் 108-உரு விதம் 48 நாட்கள் செபித்து வர 
சித்தர்கள் உனக்கு காட்சி தந்து தீட்சையை தந்து மெய்ஞான 
வழியை காட்டுவார்கள். முழுநம்பிக்கையுடன் 
செபிப்பவர்களுக்கு 48 நாட்களுக்குள்ளாகவே பலன் கிடைக்கும்.

                              பகிர்வில் ர.சடகோபால்.BA