திங்கள், 1 டிசம்பர், 2014

ஜாலக்காள் தேவி வசிய மூல மந்திரம்

 ஜாலக்காள் தேவி என்னும் தேவதையை சித்தி செய்தால் தான் ஜால விளையாட்டுகளிலும் சித்து வேலைகளிலும் வல்லவராக விளங்க முடியும்.  அப்படி பட்ட ஜாலாக்காள் தேவதையை சித்தி செய்யும் முறையை நந்தீசர் தனது சகல கலைக் ஞானம் நூலில் குறிப்பிடுகிறார். பாடல் பின் வருமாறு,

சாலமென்ற ஜாலக்காள் மூலங்கேளு 
 ஞானிகட்கு யிம்மூலம் நவில்வோங் கேளு 
ஆலமென்ற ஆம் அறியும் அவ்வும் அய்யும் 
 அரகரா ஜாலக்காள் ஆக்கிருஷயா றாறா 
வாலமென்ற வடமுகமாய்க் குந்திக்கொண்டு 
 வளமாக லட்சமுரு மண்டலந்தானோது 
காலமென்ற காலமதில் செபந்தான்செய்ய 
 கனவுபோ லுண்பங்கில் கருச்சொல்வாளே 
                                                                                   -நந்தீசர் சகல கலைக் ஞானம் 
பொருள்:
                  ஜாலத்தின் அதி தேவதை ஜாலக்காள் மூலமந்திரத்தை சொல்கிறேன் கேள் "ஆம் றியும் அவ்வும் ஐயும் ஜாலக்காள் தேவி ஆக்ரூஷய றாறா" வடக்கு முகமாய் அமர்ந்து கொண்டு 48 நாட்கள் லட்சம் உரு கொடுக்க சித்தியாகும்.

நிவேதனம்:
                        தேங்காய் , பழம்., வெற்றிலைப்பாக்கு, பொங்கல் வைத்து சாம்பிராணி  மற்றும் தீபதூபம் காட்டவும்.
இதன் பயன்:
                          மந்திரம் சித்தி செய்தப்பின் ஜாலக்காள் தேவதை கனவில் வந்து குறி சொல்லும்  ஜால வேடிக்கைகள் காண்பிக்கலாம். 

                     பகிர்வில் ர.சடகோபால்.BA