வியாழன், 18 செப்டம்பர், 2014

தேவ வசிய மை

 தேவ வசிய மை    -  நாகமல்லி மூலம் 

பாரப்பா நாகமல்லி வாங்கப் பாடுகிறேன் 
மந்திரந்தான் பண்பாய் மக்காள் சேரப்பா 
தேவபிறங்கி மூலி தன்னைச் "செய செய 
ஓம் கிரியும் பகவதா" வென்று தியானம் 
செய்து  ஆரப்பா பிடுங்கி வந்து நிழலில் 
உலர்த்தி அப்பனே பொடியாக்கி  திரியில் 
ஊட்டி பேரப்பா காராவின் நெய் எரித்து 
மையைப் போட்டிடவே தேவரெல்லாம் 
வசியமாமே 
                                                - கருவூரார் பலத்திரட்டு

பொருள் :

                    தேவ பிறங்கி என்னும் நாக மல்லிக்கு காப்பு கட்டி "செய செய 
ஓம் கிரியும் பாகவதா" 
          என்று  மந்திரம்  தியானித்து  பிடுங்கி நிழலில் உலர்த்தி தூள் செய்து திரியில் வைத்துக் காரம் பசுவின் நெய்யில் திரியை போட்டு எரித்து மை வாங்கி திலகமிட தேவர்கள் எல்லாம் வசியமாவர்கள் .

                                  பகிர்வில் ர.சடகோபால் .BA