ஞாயிறு, 19 அக்டோபர், 2014

வசியம் எட்டுக்கும் மந்திரம்


அஷ்ட கர்மங்களில் முதலாவதாக கூறப்படும் வசியம் 
எட்டு உட்பிரிவுகளை கொண்டது. அது 

1) சர்வவசியம்
2)இராஜ வசியம் 
3)புருஷவசியம் 
4)ஸ்த்ரீ வசியம்
5)மிருகவசியம் 
6)சர்ப்ப வசியம் 
7) சத்துரு வசியம் 
8) லோகவசியம் என்பனவாகும். 

இந்த எட்டுவகை வசியத்திற்குமான 
மூலமந்திரத்தையும் அதனை செபிக்கும் முறையினையும் 
அகத்தியர் தனது பரிபூரணம்1200 என்ற நூலில் கூறியுள்ளார்.
.
    வசியம் எட்டுக்கும் மந்திரம்

கேளடா வசியமென்ற யெட்டுக்குந்தான்
கிருபையுள்ள மந்திரமிது சொல்லக்கேளு
வாளடா ஓம் பிறீங் அங்அங் டங் ஸ்ரீயும் கிலியும் சுவாகா வென்று
வளமையுடன் செபிக்கிறதோர் வரிசைகேளு
காலடா முக்கோணம் நடுவில்விந்து
கருவாக லங்கெனவே சந்திரபீஜம்
ஆளடா தானெழுதிப்பூசைபண்ணி
அன்புடன் மந்திரத்தை உருவேசெய்யே.

செய்யடா தினம்நூறு உருவேசெய்தால்
செம்மையுடன் வசியமெட்டுஞ் சித்தியாகும்
மெய்யடா வசியமது சித்தியானால்
மேன்மைபெற நினைத்ததெல்லாஞ் சித்தியாகும்
அய்யனே புலத்தியனே உனக்காய்ச்சொன்னேன்
கையடா அடக்கமது மெய்யாய்ச்சொன்ன
கருணைவளர் வசியமதை கனிவாய்ப்பாரே.                                       
                                              அகத்தியர் பரிபூரணம் 1200
பொருள்:

வசியம் எட்டுக்குமான மந்திரத்தைச் சொல்கிறேன் கேள், 
"ஓம் பிறீங் அங் அங் டங் ஸ்ரீயும் கிலியும் சுவாகா
என்ற மந்திரத்தை செபிக்கும் முறை எப்படியெனில் முதலில் 
ஒரு காரீயத்தகட்டில் முக்கோணம் போட்டு அதன் நடுவில் 
ஒரு வட்டம் போட்டு அவ்வட்டத்தினுள் லங் என்று எழுதவும்.

பின்னர் ஒரு ஞாயிற்றுக்கிழமை நாளில் உடல் சுத்தியுடன் சிவப்பு நிற 
ஆடை அணிந்து கிழக்கு முகமாய் அமர்ந்து கொண்டு முறையான 
பூசை வைத்து அதன் நடுவில் இந்த யந்திரத்தை வைத்து முன் கூறிய 
வசியமந்திரத்தை நாளொன்றுக்கு 108 உரு வீதம் 48 நாட்கள் 
செபித்தால் வசியம் எட்டும் சித்தியாகும். அப்படி சித்தியானால் நீ நினைப்பதெல்லாம் சித்தியாகும். 
மாணவனே உனக்காக இதை சொல்கிறேன் கைஅடக்கமாக 
இருந்து இதன் பலனைப்பார் என்கிறார் அகத்தியர். 


                           பகிர்வில் ர.சடகோபால்.BA 

அஷ்ட கர்மம்


அஷ்ட கர்மம் என்பது மாந்திரீகத்தின் எட்டு அங்கங்களை 
குறிக்கும். அவை

1) வசியம் 
2) மோகனம் 
3) தம்பனம் 
4) உச்சாடனம் 
5) ஆக்ருஷணம் 
6) பேதனம் 
7) வித்துவேஷணம் 
8) மாரணம் என்பனவாகும்.

இவற்றை முறைப்படி கற்று தேர்ந்தவர்க்கே இது சித்தியாகும்.
அப்படி முறையாக கற்றவரே உண்மையான 
மாந்திரீகவாதியாவார். 

அப்படி அஷ்ட கர்மங்களை முறையாக கற்றுத்தேர்வதற்குரிய 
முறைகளை சித்தர் பெருமக்கள் நமக்காக அருளியுள்ளனர்.
அவ்வகையில் சல்லிய முனிவர் அருளிய சல்லியம் என்னும் 
மாந்திரீக நூலில் அஷ்ட கர்மங்களுக்குரிய நாள், திசை, உடுப்பு, 
உலோகம்,எண்ணை, அதிதேவதை, மலர், ஆசனம் இவைகள் 
பற்றிய தகவல்களை தந்துள்ளார். அதைப்பற்றி இன்றைய 
பதிவிலும் இனிவரும் பதிவுகளிலும் தெளிவாக பார்ப்போம்.

அஷ்டகர்மத்திற்குரிய நாட்கள்:

ஞாயிறு  -   வசியம்
திங்கள் -    மோகனம்
செவ்வாய் - வித்துவேஷணம்
புதன்         - தம்பனம்
வியாழன் - உச்சாடனம்
வெள்ளி      - ஆக்ருஷணம்
சனி - மாரணம் இந்நாட்களில் அக்கர்மங்கள் செய்ய அது 
சித்தியாகும்.

இதில் குறிப்பாக வியாழக்கிழமையில் எந்த வேலைகளைச் 
செய்தாலும் அது பச்சை மரத்தில் ஆணிஏறுவது போல
உடனுக்குடன் பலிக்கும் என்கிறார் சல்லிய முனிவர்.

திசைகள்:

கிழக்கு - வசியம்
தெற்கு - மோகனம்,மாரணம்
மேற்கு - உச்சாடனம்
வட்க்கு - பேதனம்
தென்மேற்கு - வித்துவேஷ்ணம்
தென்கிழக்கு - தம்பனம்
வடமேற்கு - ஆக்ருஷணம்
வடகிழக்கு - சகல கர்மத்திற்கும் உகந்த திசையாகும்.

உடுப்புகள்:

சிவந்த வஸ்திரம் - வசியம்
மஞ்சள்வஸ்திரம் - மோகனம்
பச்சை வஸ்திரம் - தம்பனம்
வெள்ளை வஸ்திரம் - பேதனம்
பச்சைப்பட்டு - உச்சாடனம்
கருப்பு வஸ்திரம் - மாரணம்
செம்பட்டு-சகல கர்மத்திற்கும் உகந்த உடுப்புகளாகும்.

உலோகங்கள்:

காரீயம்                  - வசியம்
வங்கம்                    - மோகனம்
பொன்                      - ஆக்ருஷணம்
செம்பு                       - தம்பனம்
வெள்ளீயம்          - உச்சாடனம்
குருத்தோலை - வித்துவேஷணம்
இரும்பு                    -  பேதனம்
வெள்ளி                  - மாரணத்திற்கும் உகந்த உலோகங்களாகும்.

எண்ணைகள்:

பசு நெய்                          -  வசியம்
நல்லெண்ணை            - மோகனம்
வேப்பெண்ணை         - மாரணம்
புங்கெண்ணை              - உச்சாடணம்
புன்னை எண்ணை - பேதனம்
ஆதளை எண்ணை - தம்பனம்
கழுதை,ஆடு,பன்றிகளின் நெய் - வித்துவேஷணம்
வன்னி,ஆல்,விளா,இவைகள் - சுபகர்மத்திற்கும்
கள்ளி,எருக்கு,எட்டி
அத்தி,இச்சி,விடத்தலை
இவைகள்} - அசுபகர்மத்திற்கும் உகந்த எண்ணை வகைகளாகும்.

அதிதேவதைகள்:

ஈசன்                      -  வசியம்
அக்கினி               - மோகனம்
இந்திரன்             - தம்பனம்
நிருதி                    - உச்சாடனம்
வருணன்            - ஆக்ரூஷணம்
வாயுதேவன் - வித்துவேஷனம்
குபேரன்              - பேதனம்
எமன் - மாரணம் முதலியன அஷ்டகர்மத்திற்குரிய 
அதிதேவதைகளாகும்.

மலர்கள்:

மல்லிகை   -  வசியம்
முல்லை -    மோகனம்
தாமரை -      தம்பனம்
தும்பை -       உச்சாடனம்
அரளி       -       ஆக்ரூஷணம்
காக்கண மலர் - வித்துவேஷணம்
ஊமத்தம் - பேதனம்
கடலை மலர் - மாரணம் முதலியன அஷ்டகர்மத்திற்குரிய 
மலர்களாகும்.

ஆசனங்கள்:

வில்வப்பலகை               -    வசியம்
மாம்பலகை                        -   மோகனம்
பலாப்பலகை                     -    தம்பனம்
நீலக்கம்பளம்                    -    உச்சாடனம்
வெள்ளாட்டுத்தோல் -   ஆக்ருசணம்
எட்டிப்பலகை                    -  வித்துவேஷனம்
மரத்தோலாடை              -பேதனம்
அத்திப்பலகை - மாரணம் முதலியன அஷ்டகர்மத்திற்குரிய 
ஆசனங்களாகும்.

                 பகிர்வில் ர.சடகோபால்.BA 

சூன்யம்

சூன்யம்

பாரப்பா நிலவானை மலைகள் தோறும்
பண்பாகத் தானிருக்கு மறிந்து பாரு
வாரப்பா வதினுடைய விரையத் தானும்
வளமாகப் பத்துபல மெடுத்து வந்து
சீரப்பா தலைமஞ்சன் கொடியு மாவுஞ்
சிற்ப்பாக முப்பூவும் வராகன் கூட்டித்
தேரப்பா வில்லைதட்டி யுலரப் போடு
திறமாக யுலர்த்தியதைத் தயிலம் வாங்கே - புலிப்பாணி ஜாலத்திரட்டு 30 

மலைகளில் நிலவாகை என்னும் செடி வளர்ந்திருக்கும் அந்தச் செடியைக் கண்டுபிடித்து அதன் விரைவில் பத்து பலம் எடுத்துக் கொண்டு வந்து அதனுடன் தலைமஞ்சள் கொடியின் மாவும், முப்பூவும் வகைக்கு ஒரு விராகன் வீதம் சேர்த்து அரைத்தெடுத்து வில்லை தட்டி உலர்த்தி எடுத்து முறையாகக் குழித் தயிலம் இறக்கிக் கொள்ளவும்.

வாங்கியே ஆள்காட்டி முட்டை தன்னை
வளமான சிற்றண்டத் தயிலம் போலே
தாங்கியே வாங்கியந்தத் தயில நேரே
தயவாகத் தானெடுத்துச் சிமிழிதனில் வைத்து
ஓங்கியே களவுமுதற் சூன்யம் யாவும்
உற்றுப்பார் தோற்றுமடா கள்ள மெல்லாம்
நீங்கியே யதுகண்டு பிடித்துக் கொண்டு
நினைவாகக் குருபாதம் பணிவாய்த் தானே - புலிப்பாணி ஜாலத்திரட்டு 31

அதன்பிறகு ஆள்காட்டி என்கிற குருவியின் முட்டைகளை எடுத்து சிற்றண்டத் தயிலம் போல இதில் தயிலம் இறக்கி, இந்த தயிலத்துடன் முன்னர் எடுத்த தைலத்தை சேர்த்து நன்றாக கலக்கி ஒரு சிமிழினில் வைத்துக் கொள்ளவும். இந்த தயிலத்தை வெற்றிலையில் கொஞ்சம் தடவிப் பார்த்தால் யார் திருடியது யார் சூன்யம் வைத்தது போன்றவைகள் அதில் நன்றாகத் தெரியும். குருவை நினைத்து வணங்கி இதை செய்ய வேண்டும்.

                       பகிர்வில் ர.சடகோபால்.BA