வியாழன், 13 நவம்பர், 2014

கார்த்திகை வீரியார்ச்சுன மந்திரம்


அருளாலே ஓம் ஆம் ஸ்ரீயுங் கிலியும் 
 அரிய கார்த்திகை வீரியார்ச்சுன சுவாகா வென்று 
பொருளாக லக்ஷமுரு செபித்து தீரு 
 பொங்கமாய்த் தர்ப்பணமு மோமமன்னம் 
மருளாக பூசையது பத்துஞ்செய் நீ 
 மைந்தனே சித்திக்கக் கிரிகையாகுஞ் 
சுருளாக நினைத்தபடி எல்லாஞ் செய்யுஞ் 
 சுகமான போகருட கடாஷந் தானே 
                                                                              -புலிப்பாணி சித்தர் 
பொருள் :
                    "ஓம் ஆம் ஸ்ரீம் கிலியும் அரிய கார்த்திகை வீரியார்ச்சுன சுவாஹா" 
என்று லக்ஷமுரு ஜெபித்து தர்ப்பணம் முதலிய பத்து பூஜைகள் செய்து வந்தால் சித்தியாய் முடியும். நீ நினைத்தபடி எல்லாஞ் செய்யும். இது போகருட கடாஷத்தாலே புலிப்பாணியாகிய நான் உனக்கு சொல்கிறேன்....

                         பகிர்வில் ர.சடகோபால்.BA