வியாழன், 25 செப்டம்பர், 2014

குப்பைமேனி வேர் ஆக்ருஷ்ணம்


தோற்றுமடா மேனியொன்று தனித்து நின்றால் 
    சுத்தி செய்து பால் பொங்கல் இட்டுப்பின்னும் 
மாற்றமுடன் கலைக்கொம்பால் கெல்லிக்கொண்டு 
    மந்திரந்தான் துட்டமிருக ஆகர்ஷணி 
ஏற்றமுயர் விசுவாமித்திர சுவாகாவென்று 
    சொல்லியே வாங்கிதன் வாயிற்போட 
ஆற்றமுடன் மிருகங்கள் தன்னை நோக்கி 
    அழைத்துடனே மிருக ஆக்ருஷ்ணமுமமே.
                                                                                            -கருவூரார் 

பொருள்:
                     குப்பைமேனி செடி தனியாக முளைத்திருந்தால் அந்த இடத்தில் சுத்தம் செய்து பால்,பொங்கல் வைத்து மான் கொம்பால் கொத்தி 
"துட்ட மிருக ஆகர்ஷணி ஏற்றமுயர் விசுவாமித்திர சுவாகா "     என்று மந்திரம் சொல்லி வேரை பிடுங்கி  வாயில் அதக்கிக்கொண்டு மிருகங்களை அழைக்க அவை வரும் .

                                      பகிர்வில் .ர.சடகோபால்.BA