செவ்வாய், 4 நவம்பர், 2014

சர்வ வசியம்

தேனாம் வெள்ளி ஞாயிறதில்
 திங்கள் வியாழம் நெய்யாகும் 
பானாம் செவ்வாய் புதன் பாலாம் 
 பகரு முடவன் நீராகும் 
ஆனால் ஆவின் புல்லுருவி 
 அதிலே குழைத்துத் திலர்த்தமிட 
வானோ ரெல்லாம் வசமாவார் 
 மண்ணில் சர்வ வசியமிதே 
                                                            - அகத்தியர் 

பொருள்:
                   ஆவின் புல்லுருவிக்கு காப்புக்கட்டிக் கொண்டு வந்து மோகன மந்திரத்தை லட்சம் உரு ஜெபித்து  வெள்ளிக் கிழமை,ஞாயிற்றுக் கிழமை  தேனிலும்; திங்கட் கிழமை,வியாழக் கிழமை நெய்யிலும்; செவ்வாய்,புதன், காராவின் பாலிலும்; சனிக்கிழமை நீரிலும்  குழைத்து திலர்த்தமிட , இப்பூவுலகில் சர்வ ஜனங்களும், விண்ணுலக தேவர்களும் வசியமாவார்கள்.

குறிப்பு:
                      ஆவின் புல்லுருவி என்பது  ஆலமரத்து புல்லுருவியாகும் .

மோகன மந்திரம்:
                       "ஓம் கிலியும் சவ்வும் றியும் ஸ்ரீயும் ஐயும் ஒம்சங்  மசிவயந  மோஹனாய சுவாகா"


                      பகிர்வில் ர.சடகோபால்.BA