செவ்வாய், 21 அக்டோபர், 2014

மூலிகை சாப நிவர்த்தி

மூலிகை சாப நிவர்த்தி செய்யும் முறை- கருவூரார் 

மூலிகை இருக்கும் இடத்தை சுத்தம் செய்து, பொங்கல் வைத்து, அதன் முன் வாழை இலையில் தேங்காய்,பழம்,வெற்றிலை பாக்கு,வத்தி சூடம் இவைகளை வைத்து தூப தீபம் காட்டி கீழ் கண்ட மந்திரத்தை 108 உரு கொடுக்கவும். 

"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸௌம் சிவயநம ப்ரஹ்ம நாரத தேவமுனி கணசாபம் நாஸய நாஸ ஸ்வாஹா."

மஞ்சள் நூலால்  காப்பு கட்டினவுடன் ஒரு எலுமிச்சம்பழம் அறுத்து அதை மூன்று சுற்று சுற்றி எறிந்து விட்டு, வேர் எடுக்க வேண்டும். வேர் எடுக்கும் போது ஆணிவேர் ஆறாமேல் வேர் எடுக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை தான் மூலிகை எடுக்க உரிய நாள். 
 இவ்விதம் காப்பு கட்டி சாப நிவர்த்தி செய்து எடுத்தால் தான்  மூலிகை நூலில் சொன்ன பலன்  தரும். 
விநாயகர் பூஜை அவசியம் செய்ய வேண்டும்.

                  பகிர்வில் ர.சடகோபால்.BA