வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

நீயும் ஒரு ஞானி தான்

நீயும் ஒரு ஞானி  தான் ராமாயணத்தில் சீதையின் தந்தையான ஜனகர் இல்லற ஞானி ஆவர் ராஜாங்க தில் இருந்துகொண்டே ஞான மார்க்கத்தை கைக்கொண்டார் ஒருகதை உண்டு காட்டில் ஒருதவரிசி இருந்தார் அவர் அவருடைய மகனுக்கு எல்லா சாஸ்திரக ளை யும் கற்றுகொடுத்தார் மேலும் கற்றுக்கொள்ளஅந்த சிறுவனை  அந்தநாட்டு மன்னனிடம் அனுப்பினார்  அந்தசிறுவனும் மன்னனிடம்.சென்று ,தனக்கு மேற்கொண்டு சொல்லி கொடுக்கவேண்டும் என்று கேடடான் .மன்னனும் சிறுவனிடம் ஆத்மாவை  பற்றி கேட்டான் ,சிறுவனுக்கு எதுவும் தெரியவில்லை ..மன்னனும் அந்த சிறுவனை மறுபடியும் அவனுடைய தந்தையிடம் அனுப்பி கேள்விக்கு பதில் கேட்டு வரசொன்னான் .சிறுவன் சென்று தன் தந்தை இடம்
மன்னன்கூறியத்தை கூறி பதிலை ,எதிர்பார்த்தான் ..அவருக்கும் பதில் தெரியவில்லை ..பின்னர் அவர்கள் இருவருமே ,மன்னனிடம் சென்று சீடர்களாக சேர்ந்து பாடம் கற்றார்கள் என்பது கதை ..ஆகவே ஞானம் அடைய
காடுகளுக்கும் ,மலைகளுக்கும் அலையவேண்டாம் .கொங்கணரின் கதையில் இறைச்சி விற்பவனும் ஞானி யாய் இருந்தான் இதையே வள்ளுவரும் ,வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் ,வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் .என்றார் .[தொடரும்

கருத்துகள் இல்லை: